மசாஜ் செய்யனும் வா! மாணவிக்கு 200 போன் கால் செய்த சாமியார் சின்மயானந்த்! விசாரணையில் வெளியாகும் திடுக் தகவல்!

நீண்ட இழுபறிக்குப் பிறகு பாஜக முன்னாள் எம்.பி. சின்மயானந்த் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாஜக தலைவர்களுள் மிகவும் முக்கியமானவர் சின்மயானந்த். இவர் பல கல்லூரிகளை நடத்தி வருகிறார். இவருடைய வயது 72. ஷாஜஹான்பூரிலுள்ள இவருடைய கல்லூரியில் பயிலும் மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். 

பாதிக்கப்பட்ட மாணவி ஃபேஸ்புக்கில் சின்மயாநந்த் மீது புகார்களை பரப்பினார். அந்த பெண் மாயமாகிவிட்டார். இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவல்துறையினர் அந்த பெண்னை தேடி வந்தனர்.

தன்னுடைய நண்பருடன் அந்த பெண் ராஜஸ்தானில் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். காவல்துறையினர் தேடி அலைந்ததில் அந்த பெண்ணை கண்டு பிடித்தனர்.  உடனடியாக அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் கூறுகையில், " என்னை முதன்முதலில் சின்மயாநந்த் பாலியல் வன்கொடுமை செய்தபோது காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் காவல் என்னை கொன்று விடுவதாக மிரட்டினர்.

அதனால் ஃபேஸ்புக்கில் பதிவு செய்த உடனே நான் தலைமறைவாகி விட்டேன். மேலும் என்னுடைய விடுதி அறையை சீல் வைத்துள்ளனர். அதனை ஊடகத்தின் முன்னர் திறக்க வேண்டும். எனக்கு 200 முறைக்கு மேல் போன் செய்து அவருக்கு மசாஜ் செய்துவிடும்படி வற்புறுத்தினார்.என்னை மட்டுமின்றி பல பெண்களின் வாழ்க்கையையும் சின்மயானந்த அழித்துவிட்டார்" என்று கூறினார்.

சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு அந்த பெண்ணிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டனர். சின்மயாநந்த் மீது எந்நேரத்திலும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சின்மயானந்தை காவல்துறையினர் கைது செய்யவில்லை. 

நீண்ட நாட்கள் பொது திறந்த மாணவி மீண்டும் பேஸ்புக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் "சின்மயானந்தை விரைந்து கைது செய்யவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்" என்று கூறியிருந்தார். அதிர்ந்துபோன புலனாய்வுத்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டனர்.

கடைசியாக சின்மயாநந்த் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கில் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சின்மயாநந்துக்கு சொந்தமான மருத்துவமனைகள் கல்லூரிகள் ஆகியவை சீல் வைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவமானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.