கணவன் தற்கொலை! கள்ளக் காதலனை 2வதாக மணக்கும் விஜய் டிவி மைனா!

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் அதிகமாக வலம் வந்து தன் ரசிகர்களுக்கு கனவுக்கன்னியாக திகழ்ந்து வரும் மைனா தன் இரண்டாவது கணவரை தேர்வு செய்துள்ளதாக கூறியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் சீரியல் தொடர்களில் தற்போதைய அதிகமாக வலம் வருபவர்களில் மைனா குறிப்பிடத்தக்கவர். இவர் நடித்த பல்வேறு தொலைக்காட்சித் தொடர்கள் பெரிதளவில் வெற்றி அடைந்துள்ளன. வீட்டுப் பெண்ணாக நடித்து வரும் இவருக்கு தனியே ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு என்று கூறினால் அது மிகையாகாது. கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி ஆகிய படங்களிலும் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சயமானவராக ஆகியுள்ளார்.

இவருக்கும் சின்னத் திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த தொடர் சரவணன் மீனாட்சியேயாகும். இவர் அதில் நடித்த பிறகுதான் சின்னத்திரையில் ஒரு முத்திரை பதித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்க இயன்றது. இவர் தற்போது அரண்மனைக்கிளி, சின்னத்தம்பி ஆகிய விஜய் டிவி தொலைக்காட்சி தொடர்களில் அசத்தி வருகிறார்.

இவரது நடிப்பு வாழ்க்கை பிரகாசமாக இருப்பினும் நிஜ வாழ்க்கையில் பல்வேறு சோகமான நிகழ்வுகளை கடந்து வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் ஒரு ஜிம் மாஸ்டரை காதலித்து திருமணம் செய்தார். திருமணமான சில மாதங்களிலேயே அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் கருத்து வேறுபாடுகள் மிகுதியாக தொடங்கின.

இருவருக்கும் ஒத்துவராது என்பதை உணர்ந்த மைனா அவரை விட்டு பிரிந்து வாழ்ந்தார். எதிர்பாராதவிதமாக ஒரு நாள் மைனா நேரலையில் ஒரு நிகழ்ச்சியில் இருந்த போது அவர் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு மைனா பெரிய அளவில் ரியாக்ட் செய்யவில்லை. சில நாட்களிலேயே அவர் மீண்டும் தொலைக்காட்சி தொடரில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் இவர் ஒரு டான்ஸ் மாஸ்டரை காதலித்து வருவதாக புரளிகள் வெளிவந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு பேட்டியில் மைனா தான் ஒரு சீரியல் நடிகரையே காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் கூறினார். 

இந்தப் பேட்டியானது  சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மைனா கள்ளக் காதல் வைத்திருந்த காரணத்தினால் தான் அவரது கணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. தற்போது அதனை உண்மையாக்கும் வகையில் அந்த கள்ளக் காதலனைத்தான் மைனா திருமணம் செய்ய உள்ளதாக சொல்கிறார்கள்.