ஆந்திரா டூ ஆப்ரிக்கா..! பல்லாயிரக்கணக்கான ஏக்கர்..! மெட்ராஸ் எல்ஐசி ஏஜன்ட் விஜயகுமார் கல்கி பகவான் ஆன கதை!

கல்கி ஆசிரமங்களிலும், என்.கே.வி கிருஷ்ணா நடத்திவரும் நிறுவனங்களிலும் திடீரென்று ஐ.டி. ரெய்டு நடந்திருப்பது வைரலாகி வருகிறது.


ஆந்திரா மாநிலம்தான் கல்கி பகவான் ஆசிரமங்களின் தலைமை இடமாகும். ஸ்ரீ பகவான் என்று அழைக்கப்படும் விஜயகுமார் என்பவர் தான் இந்த ஆசிரமத்தை நிறுவினார். தற்போது இந்த ஆசனங்கள் நாடுமுழுவதும் பல்வேறு கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் சுமார் 20 கிளைகள் உள்ளன.

இந்நிலையில் சமீபகாலமாக இந்த ஆசிரமங்களில்  வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் ஆசிரமத்தில் உள்ள இளைஞர்களுக்கு போதைப் பொருள் கொடுத்து அவர்களை ஆபாச செயல்களில் ஈடுபடுமாறு வற்புறுத்தியதாக கூறப்பட்டது. மேலும் சிறப்பு பூஜை என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் வசூலிக்கப்பட்டது ஆகும் புகார் எழுந்தது. நீதிமன்றங்கள் வரை சென்ற இத்தகைய புகார்கள் தற்போது தான் சற்று ஓய்ந்துள்ளன.

கல்கி நிறுவனங்களுக்கு மேலும்‌ ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது. கல்கி ஆசிரமங்களிலும், அவருடைய மகனான கிருஷ்ணா நடத்திவரும் பக்தாலங்களிலும் நாடு முழுவதிலும் நேற்று ஐ.டி. ரைட் நடத்தப்பட்டுள்ளது. இதில் கணக்கில் வராத பல பண பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆயிரம் கோடி மதிப்பிலான வரி ஏய்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகைய வருமானவரி சோதனைகளின் மூலமாக 20 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் சாதாரண எல்ஐசி ஏஜென்டாக பணியாற்றி வந்த விஜயகுமார் நாயுடு பல வருடங்களுக்கு முன்னர்  சென்னை - தடா எல்லையில் உள்ள வரதய்யா பாளையத்தில் ஆசிரமம் ஒன்றை துவக்கினார். இவரிடம் ஆசி பெற்றால் நினைப்பது நடப்பதாக ஒரு புரளி கிளம்பியது இதனை அடுத்து கூட்டம் அலைமோதியது.

இதனை பயன்படுத்தி ஆசிரமத்தை விரிவுபடுத்தி தற்போது பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு விஜயகுமார் அதிபதியானதாக சொல்லப்படுகிறது. ஏராளமான தொழில்கள் மூலம் வருமானமும் குவியும் நிலையில் அதற்கு முறையாக வரி கட்டாத காரணத்தினால் தற்போது ரெய்டில் சிக்கியதாக சொல்கிறார்கள்.

இந்தியா மட்டுமின்றி ஆபிரிக்க நாடுகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை சரியான பணபரிவர்த்தனை மூலம் இல்லாமல் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருமான வரி சோதனையானது இன்றுவரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோதனையில் மேலும் பல முக்கிய ஆவணங்கள் சிக்கக்கூடும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

இந்த சம்பவமானது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.