டெல்லி சுல்தான்பூரில் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து காம இச்சையை தீர்த்த மருத்துவர்!
டெல்லியின் ரோகிணி
பகுதியைச் சேர்ந்தவர் ஜோகிந்தர் சிங். மருத்துவரான இவர் சுல்தான்பூரில்
மருத்துவமனை நடத்தி வந்தார்.
இந்நிலையில் கடந்த புதன் கிழமை காலை உடல் நலக்
குறைவால் தன்னிடம் சிகிச்சை பெற வந்த சிறுமியை சோதனை எனக் கூறி தனி அறைக்கு
அழைத்துச் சென்ற அவர் அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக்
கூறப்படுகிறது.
சிகிச்சைக்கு வந்த சிறுமியிடம்சிகிச்சை
அளிப்பதாக கூறி மருந்தை ஒன்றை மருத்துவர் கொடுத்துள்ளார். அந்த மருந்தை
சாப்பிட்டதும் சிறுமி அரை மயக்கத்திற்கு சென்றுள்ளார்.
இதனை சாதகமாக எடுத்துக் கொண்ட மருத்துவர்
சிறுமியின் உடைகளை களைந்து தன்னுடைய காம இச்சையை தீர்த்துக் கொண்டான். வெகு
நேரமாகியும் சிறுமி மருத்துவர் அறையில் இருந்து வராத காரணத்தினால் பெற்றோருக்கு
சந்தேகம் ஏற்பட்டது.
திடீரென அறைக்குள் சென்று பார்த்த போது அரை
மயக்கத்தில் இருந்த சிறுமியை மருத்துவர் சீரழித்துக் கொண்டிருந்திருக்கிறான்.
உடனடியாக அவனை நையப்புடைத்த பெற்றோர் மற்றும் சிலர் காவல் நிலையத்திற்கு தகவல்
அளித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஜோகிந்தர் சிங்
மீது பாலியல் பலாத்காரம், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது
செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.