பிராவோ, வாட்சன் வேற லெவல்: இரண்டாவது வெற்றியை ருசித்த CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ipl போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


டாஸ் வென்று பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிரிதிவி ஷா மற்றும் ஷிகர் தவான் சிறப்பான டெல்லி கேபிட்டல்ஸ்  அணி 148 ரன்களை இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். பிரிதிவி ஷா 24 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய  அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷாப்  பாண்ட் அதிரடியாக விளையாடி 25 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.ஒரு முனையில் ஷிகர் தவான் மட்டும் நிதானமாக விளையாடி 51 ரன்களை அடித்து டெல்லி அணி ஓரளவு நல்ல ஸ்கோரை எட்ட உதவினார்.

அந்த அணியின் மற்ற வீரர்கள் கடைசி 5 ஓவரில் ரன் குவிக்க முடியாமல் திணறினர். இதனால் அந்த அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 147 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. சென்னை அணியின் சார்பாக பிராவோ 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

பின்னர் சேஸிங்கை தொடர்ந்த சென்னை சூப்பர் கிங்சின் தொடக்க ஆட்டக்காரர் அம்பட்டி ராயுடு 5 ரன்களுக்கு  இஷாந்த் சர்மா பந்தில் வெளியேறினார்.பின்னர் வாட்சன் உடன் ஜோடி சேர்ந்த சுரேஷ் ரெய்னா ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய சுரேஷ் ரெய்னா 30 ரன்களுக்கும்  ஷான் வாட்சன் 44 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர்.

பின்னர் ஜாதவ்வுடன் இணைந்த டோனி நிதானமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.ஜாதவ் 27 ரன்கள் சேர்த்தார். டோனி ஆட்டமிழக்காமல் 32 ரன்களை எடுத்தார்.இதனால் சென்னை அணி 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. சிறப்பாக விளையாடிய ஷான்  வாட்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.