இதைப்ப்டித்தால் புடலங்காய் என்றதும் முகம் சுளிக்க மாட்டீர்கள்

புடலங்காயை நாம் ஒரு மூலிகை என்பதை அறியாமலேயே பயன்படுத்தி வருகிறோம்.


இதில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும். புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டு செய்து தொடர்ந்து 12 நாட்கள் இடைவெளி விட்டு ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கீழே விழுந்து விடும்.

எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவார்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

அதிக உடல் சூட்டால் மஞ்சகாமாலை நோய் ஏற்பட்டால் அவர்கள் புடலை இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் அதே அளவு கொத்தமல்லி சேர்த்து 300 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை கட்டுப்படும். இதயக் கோளாறு உள்ளவர்களும் இந்த இலையின் சாறை நாள்தோறும் 2 தேக்கரண்டி வீதம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் அனைத்தும் நீங்கும்.   

புடலங்காய் பொரியல் செய்து சாப்பிட நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். வயிற்றுப்பூச்சிகள் வெளியேறும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் புடலங்காயை எந்த வகையிலாவது சேர்த்து வர அனைத்து வகையான சத்துகளும் அவர்களுக்கு கிடைக்கும்.  

 

கடும் காய்ச்சல் உள்ளவர்கள் புடலங்காயை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை பருகினால் ஒரே நாளில் காய்ச்சல் குறைந்துவிடும்.