மதுபோதையில் நண்பன் கொடூர கொலை! சடலத்துடன் இரவு முழுவதும்..! ராஜபாளையத்தை அதிர வைத்த ராணுவ வீரர்!

மது கொடுத்து நண்பரை ராணுவ வீரர் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவமானது ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் அமைந்துள்ளது. இப் பகுதிக்கு உட்பட்ட சின்னசுரைக்காய்பட்டி எனும் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருடைய வயது 28. இவர் சுற்றுவட்டார பகுதிகளில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார்.

இவர் வீட்டுக்கு அருகே குறிஞ்சி நகர் எனும் இடமுள்ளது. இங்கு நாராயணசாமி என்பவர் வசித்து வந்தார். இவர் முன்னாள் ராணுவ வீரராவார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். ஒன்றாக சேர்ந்து மது அருந்தும் பழக்கமும் இவர்களுக்கு இருந்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் நாராயணசாமிக்கும், அவருடைய உறவினருக்கும் தகராறுகள் ஏற்பட்டுள்ளன. அப்போது சதீஷ்குமார் நாராயணசாமிக்கு எதிராக பேசியுள்ளார். மேலும் அவருடன் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் நாராயணசாமி ஆத்திரமடைந்தார். சதீஷ்குமாரை தீர்த்துக்கட்ட முடிவெடுத்தார். அதன்படி ஒரு நாள் அவரை என் வீட்டிற்கு அழைத்து மது விருந்து அளித்துள்ளார். அவர் நன்றாக மது அருந்திய பிறகு அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்‌. அதிகாலையில் காய்கறி வண்டியை நாராயணசாமி வாடகைக்கு எடுத்துள்ளார்.

அதில் சதீஷ்குமாரின் உடலை போட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் சதீஷ்குமாரின் மணிபர்ஸ் அவரது உடலில் இருந்ததால் காவல்துறையினர் எளிதாக துப்பு துலக்கி நாராயணசாமியை கைது செய்துள்ளனர்.

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்த குற்றத்திற்காக நாராயணசாமியை சிறையிலடைத்துள்ளனர். இந்த சம்பவமானது விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.