தயாரிப்பாளர் சங்கம் போடும் தடை!சேலத்தில் நேர்கொண்ட பார்வை வெளியாவதில் சிக்கல்!

நடிகர் அஜித் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 8-ம் தேதி திரைக்கு வர இருக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை சேலத்தில் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் மற்றும்  சேலம் ஏரியா வினியோகஸ்தர்களும் இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன . 

பொதுவாக சேலத்தில் பெரிய நட்சத்திரங்களான ரஜினி ,கமல் ,அஜித், விஜய், சூர்யா போன்ற  நடிகர்களின் படத்திற்கு அதிக வசூலை அடைவதற்காக  65 ஸ்கிரீன்களில் திரைப்படம்  வெளியிடப்படும் .

ஆனால் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு 45 ஸ்கிரீன்களில் மட்டுமே இனிமேல்  திரைப்படத்தை வெளியிட முடியும்  எனவும் அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

இதனால் நடிகர் அஜித் நடிப்பில் அடுத்த வாரம் வெளிவர காத்திருக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு சேலம் மாவட்டத்தில் பெரிய சிக்கல் எழுந்துள்ளது .

நடிகர் அஜித்தின் விசுவாசம் திரைப்படம் பி, சி சென்டர்களில் மிகப்பெரிய வசூலை அள்ளியதால் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை திரையிட பெரிய  அளவில் திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வந்தனர் . ஆனால் இந்த ஆலோசனைக் கூட்டத்தின்  எடுக்கப்பட்ட சில முடிவுகளால் தியேட்டர் உரிமையாளர்கள் திட்டமிட்டபடி இந்த படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது . 

ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தை பொறுத்தவரை ஆலோசனை கமிட்டியில் உள்ள அனைவருமே தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் .  மேலும் சேலத்தில் உள்ள விநியோகஸ்தர்களை விட சில முக்கிய புள்ளிகள் எடுக்கும் முடிவில்  தான் எத்தனை ஸ்கிரீனில் படம் ரிலீஸ் ஆகும்  என்பது முடிவு செய்யப்படும் என்று சிலர் கூறி வருகின்றனர் .

இதனால் சேலத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திட்டமிட்டபடி அனைத்து தியேட்டர்களிலும் வெளியாகுமா என்பதை  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.