19 வயதில் திருமணம்! 29 வயதில் தான் கர்ப்பம்! ஆனால் நிறை மாதத்தில் தேவிக்கு ஏற்பட்ட பகீர் சம்பவம்! அதிர்ந்த உறவுகள்!

8 மாத கர்பிணி மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் காட்டுக்கொட்டாய் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவியின் பெயர் தேவி. தேவியின் வயது 29. இத்தம்பதியினர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். 10 ஆண்டுகளாக குழந்தையில்லாத காரணத்தினால் செயற்கை கருத்தரித்தல் மூலம் தேவி கருவுற்றார்.

8 மாத கர்ப்பிணியான தேவி கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருமல் மற்றும் சளியால் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் அவருக்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. உடனடியாக அவரை உறவினர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

செயற்கை கருத்தரித்தல் செய்துகொண்டு அந்த மருத்துவமனையில் இருந்து திரும்பினர். பெரம்பலூர் அருகே வந்து கொண்டிருந்தபோது நள்ளிரவு 12 மணியளவில் மூச்சுத்திணறல் அதிகமானவை தொடர்ந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதிகாலை ஒரு மணியளவில், காய்ச்சல் மூச்சுத் திணறல் அதிகமானதால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் தேவியின் ரத்த மாதிரியை திருச்சி அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.

தேவியின் மரணம் குறித்து அவருடைய உறவினர்கள் கூறுகையில், "தேவியின் மரணமானது எங்களை பெரிதளவில் பாதித்துள்ளது. மூச்சுத்திணறல் தொடங்கியபோது திருச்சி செயற்கை கருத்தரித்தல் மருத்துவமனையை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அலட்சியமாக கூறினர்.

அந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் அலட்சியமாக செயல்பட்டதே தேவியின் மரணத்திற்கு காரணம்" என்று உறவினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.