சென்னையில் தாயின் இரண்டாவது கணவர் 4 வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மனைவியின் 4 வயது மகளை துஷ்பிரயோகம் செய்து சிதைத்த கணவன்! விசாரணையில் அம்பலமான பகீர் சம்பவம்!
சென்னை வியாசர்பாடி கக்கன்ஜி காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ் (27),இவருக்கும் பவானி (24), என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் தற்போது அவர்களுக்கு யாழினி (4), என்ற மகளும் ரமேஷ் (1)என்ற மகனும் உள்ளனர். கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பவானி அடிக்கடி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.இந்நிலையில் ஒருநாள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஆத்திரமடைந்த ரமேஷ் பவானியை கடுமையாக தாக்கியுள்ளார்.
இந்நிலையில் பவானி அவரிடமிருந்து பிரிந்து புழல் கண்ணப்பசாமி நகரில் தனது 2 குழந்தைகளுடன் தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆசிப்(25), என்பவருக்கும் பவானிக்கும் நட்பு மலர்ந்துள்ளது. இந்நிலையில் அந்த நட்பு நாட்கள் செல்ல செல்ல கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் பவானி ஆசிப் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். திடீரென தனது மூத்த மகள் யாழினி உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ரமேஷுக்கு தகவல் சென்றுள்ளது. இந்நிலையில் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார்.
அங்கு சென்று பார்த்தபோது யாழினி மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மற்றும் தனது மகளின் இறப்பில் தனக்கு சந்தேகம் இருப்பதாக காவல்துறையில் ரமேஷ் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் புகாரை ஏற்ற காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.அங்கு உடலை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் கழுத்தை நெரித்தும், குழந்தையின் வயிறு மற்றும் முதுகுப் பகுதிகளில் கடுமையாக தாக்கப்பட்டு இருப்பதாகவும் மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்நிலையில் காவல்துறையினர் பவானி மற்றும் ஆசிப் என்பவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் யாழினியை உடலில் சிகரெட்டால் சூடு வைத்தும் அடிவயிறு, கன்னம், முதுகு ஆகிய பகுதிகளில் பலமாக ஜல்லி கரண்டியால் அடித்தும், குழந்தையை கொலைவெறியில் வயிற்றில் எட்டி உதைத்து கொன்றதாக ஆசிப் தனது வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து ஆசிப் மீது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் கொலை செய்த நோக்கத்தோடு அடித்து துன்புறுத்துவது மற்றும் போக்சோ சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் இருவரையும் போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.