உடல் முழுவதும் பற்றி எரிந்த தீ! காப்பாற்றுமாறு 1கிமீ ஓடிய இளம் பெண்! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்னை உயிருடன் எரித்து கொலை செய்ய முயன்ற சம்பவமானது உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் உண்ணாவ் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. மார்ச் மாதத்தில் 2 அங்குள்ள ஒரு கிராமத்தில்ஃ வாழ்ந்து வந்த 23 வயது இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த வழக்கானது அங்குள்ள நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. அப்போது வழக்கிற்காக பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்தார். 

திடீரென்று 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருந்த பெண்ணை தூக்கி சென்றனர். அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தீ வைத்து எரிக்கவும் முயன்றுள்ளனர். உடலில் பலத்த தீக்காயங்களுடன் அந்த இளம்பெண் அங்கிருந்து தப்பித்தார்.

உடல் முழுவதிலும் தீப்பற்றி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை  ஓடிசென்ற பெண்ணுக்கு யாரும் உதவ முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. அப்பகுதியில் சமையல் எரிவாயு கிடங்கு அருகே சென்று கொண்டிருந்தபோது ரவீந்திர பிரகாஷ் என்பவரிடம் பாதிக்கப்பட்ட பெண் உதவி கேட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய மொபைல் போனையும், பணப்பையும் பத்திரமாக வைத்திருந்துள்ளார். 

சிலர் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் தனக்கு உதவுமாறும் ரவீந்திர பிரகாஷிடம் கெஞ்சியுள்ளார். உடனடியாக அவர் பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் அந்தப் பெண்ணின் தலையை நோக்கி சம்பந்தப்பட்டவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். 

தற்போது அவருக்கு லக்னோவிலுள்ள சிறப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் 2 பேர் கைதாகியுள்ள நிலையில், மேலும் 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவமானது உத்திரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.