சாப்பாடு கிடையாது..! ஒன்லி உடல் உறவு தான்..! 20 வயது இளம் பெண்ணை தனி அறையில் அடைத்து வைத்து 2 நாட்களாக ரேப் செய்த கொடூரன்! புதுக்கோட்டை திகுதிகு!

உணவு வழங்காமல் 2 நாட்களுக்கு அடைத்துவைத்து இளம்பெண்ணை கட்டிட தொழிலாளி கதற கதற கற்பழித்த சம்பவமானது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் கீழச்சேரி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கண்ணன்-செல்லாயி ஆகிய  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இத்தம்பதியினருக்கு தனலட்சுமி என்ற 20 வயது மகளுள்ளார். இவர்கள் வீட்டில் கழிப்பிடம் இல்லை. ‌

24-ஆம் தேதி அன்றிரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக இவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன் பிறகு அவர் மாயமாகிவிட்டார்.  அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தனலட்சுமியை தேடுவதை தொடங்கினர். பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் தனலட்சுமி கிடைக்காத காரணத்தினால் வேறு வழியின்றி காவல்நிலையத்தில் புகாரளித்தனர். 

புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் தனலட்சுமியை பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர். இருப்பினும் அவர்களாலும் தனலட்சுமியை கண்டுபிடிக்க இயலவில்லை. திடீரென்று ஒருநாள் தனலட்சுமியின் சகோதரரிடம் அவர்களது உறவினரான சுரேஷ் என்பவர் தன்னுடைய வீட்ட6 தனலட்சுமியிருப்பதாக கூறியுள்ளார்.

பதறியடித்துக்கொண்டு காவல்துறையினருடன் சுரேஷின் வீட்டிற்கு தனலட்சுமியின் பெற்றோர் சென்றுள்ளனர். அப்போது ஒரு தனி அறையில் மயக்கமடைந்த நிலையில் தனலட்சுமி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டெடுத்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவர்கள் செய்த பரிசோதனையில் தனலட்சுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆக காவல்துறையினர் தலைமறைவாக இருந்த சுரேஷை தேடி வந்தனர். 

சுரேஷ் ஏற்கனவே 2 திருமணங்கள் செய்தவர் என்பதும், இரண்டு மனைவிகளையும் பிரிந்து வாழ்ந்து வருவதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அப்போது தனலட்சுமியின் மீது சுரேஷுக்கு மோகம் வந்துள்ளது. வீட்டை விட்டு தனியாக வெளியே வந்தவுடன், தனலட்சுமியை கடத்தி சென்று அவருடைய வீட்டில் அடைத்துள்ளார்.

உணவு கொடுக்காமல் 2 நாட்களுக்கு அவரை கொடுமைப்படுத்தி கற்பழித்து வந்துள்ளார் என்று காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். தலைமறைவாகியுள்ள சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.