17 வயதுச் சிறுமியை அவளது காதலன் தனது நண்பனுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
17 வயதுக் காதலியை நண்பனுடன் சேர்ந்து அனுபவித்த காதலன்! அதிர வைத்த சம்பவம்!

அறியாத வயதில் புரியாத ஆசைகளை வளர்த்துக்கொண்டு காதல் என்ற பெயரில் வாழ்க்கையைத் தொலைக்கும் அவலப் பெண்களின் வரிசையில் அந்த 17 வயதுச் சிறுமியும் சேர்ந்துவிட்டாள். உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரிதாபத்துக்குரிய அந்தச் சிறுமி. கடந்த செவ்வாய்க் கிழமை வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்தச் சிறுமியை இரு நபர்கள் கடத்திச் சென்றனர்.
அந்தச் சிறுமியை தங்களது இடத்துக்குக் கொண்டு சென்ற அவர்கள் இருவரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மறுநாள் காலையில் தாங்க முடியாத உடல் மற்றும் மன வேதனையுடன் வீடு திரும்பிய அந்தச் சிறுமி தனக்கு நேர்ந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர். இதனிடையே அந்த இருவரில் ஒருவன் அந்தச் சிறுமியின் காதலன் என்றும் அந்த நம்பிக்கையிலேயே அந்தச் சிறுமி அவர்களுடன் சென்றதாகவும் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.