13 வயது சிறுவனை கடத்தி கூட்டு செக்ஸ் வல்லுறவு! 4 இளைஞர்கள் வெறிச் செயல்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 13 வயதுச் சிறுவனை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


ஷாஜகான்பூரை அடுத்த புவாயா கிராமத்தைச் சேர்ந்த அந்த 13 வயதுச் சிறுவன் நேற்று வழக்கம்போல விளையாடச் சென்ற போது தனக்கும் கூட இவ்வாறு நேரக்கூடும் என சற்றும் எதிர்பார்த்திருக்க வில்லை. பெண்கள், சிறுமிகள், பெண் குழந்தைகளை விட்டு வைக்காமல் வேட்டையாடி வரும் சமூக சாபக்கேடுகளில் ஒன்றான ஒரு கும்பலின் பார்வை  இந்த முறை ஒரு சிறுவனின் பக்கம் திரும்பி சீரழித்தது.  

சிறுவனை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்ற 4 பேர்  கும்பல் ஒரு பழத் தோட்டத்துக்குள் கொண்டு சென்றதகவும் அங்கு அவர்கள் அந்தச் சிறுவனை அழுத்திப் பிடித்துக்கொண்டு மாற்றி மாற்றி வன்புணர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது. 

ஒருவழியாக அந்தச் சிறுவனை விட்டுவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடிவிட, வீட்டுக்கு வந்த சிறுவன் தனக்கு நேர்ந்ததை வேதனையுடனும் அழுகையுடன் விவரித்ததையடுத்து, பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் தலைமறைவாகியுள்ள ரஹ்மான், ரவி, குல்லி, வாசிம் என்ற 4 பேரை தேடி வருகின்றனர். 

கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு கொடுப்பது போல் இந்த மனித மிருகங்களுக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. அதே சமயம் குற்றவாளிகளை கைது செய்வதில் போலீசார் மெத்தனம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.