10 மாத பச்சிளம் குழந்தை பலாத்காரம்! 15 வயது சிறுவன் வெறிச் செயல்!

10 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


கரவ்லி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த அந்தக் குழந்தையின் பக்கத்து வீட்டுக் காரன் தான் அந்த 15 வயது சிறுவன். குழந்தையின் அருகில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிச் சென்ற அவன் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு குழந்தையைக் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டு பின்னர் வீட்டில் கொண்டு வந்து போட்டு விட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் குழந்தைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு  சென்றபோது மருதுவர்கள் குழந்தைக்கு நேர்ந்ததைத் தெரிவித்தனர். இது தொடர்பாக குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது குழந்தையின் வீட்டுக்கு 15 வயது சிறுவன் வந்து சென்றது கண்டுபிடிக்கபட்டது. இதனை அடுத்து அவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது முதலில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அவன் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டான். இதையடுத்து  அவனை கைது  செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.