97 பேர் உடல் கருகி உயிரிழந்த விமான விபத்தில் அதிஷ்டவசமாக சிறு காயமும் இன்றி தப்பிய விமான பணிப்பெண்..! காரணம் அந்த ஒரு நொடி! எப்படி தெரியுமா?

பாகிஸ்தானில் பயணிகள் விமானம் கராச்சி பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக விமான பணிப்பெண் ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.


கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பாகிஸ்தானில் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் பாகிஸ்தானில் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் ஏ 320 விமானம் லாகூரில் இருந்து கராச்சிக்கு 99 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்கள் என மொத்தம் 107 பேர் பயணம் செய்தனர். 

இந்த விமானம் கராச்சியில் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக கராச்சியில் உள்ள மலிர் பகுதியிலுள்ள மாடல் காலனி குடியிருப்பு பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதனால் அந்த பகுதியில் பெரும் புகை மூட்டம் ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விமானம் தனது முழு கட்டுப்பாட்டை இழந்து விட்டதாக விபத்துக்கு முன்னாள் விமானி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 97 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதிர்ஷ்டவசமாக விமான பணிப்பெண் ஒருவர் உயிர் தப்பியுள்ளார். இந்த விமானத்தில் பணிப்பெண்ணாக மதிரா இராம் செல்லவிருந்தார். ஆனால் பணி பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டு இருந்ததால் அவருக்கு பதிலாக ஆணம் மசூத் என்பவர் அந்த விமானத்தில் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

இந்த விமான விபத்தில் பணிப்பெண்ணாக சென்ற ஆணம் மசூத் என்பவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை பணி பட்டியலில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தால் மதிரா இராம் பணிப்பெண்ணாக சென்று இந்த விபத்திலும் சிக்கி இருப்பார். இதன் காரணமாக மதிரா இராம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.