சம்பவம் நடந்து 3 வருடங்கள் ஆகிவிட்டது..! ஆனாலும்..! இளம் மாணவி எடுத்த பகீர் முடிவு!

உத்தர பிரதேச மாநிலத்தில் சக மாணவிகள் பேசாமல் புறக்கணித்ததால் அந்த வேதனையில் மாணவி ஒருவர் தற்கொலைசெய்து கொண்ட சோக சம்பவம் அரங்கேறி உள்ளது.


உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் 11 -ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதை அடுத்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். 

பின்னர் மாணவியின் தற்கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரணை மேற்கொண்ட போது விடுதியில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் மாணவி எழுதி வைத்து விட்டு சென்ற கடிதம் போலீசாரின் கையில் சிக்கியது.

அதில், ‘அந்த சம்பவம் நடந்து 3 வருடம் ஆகிவிட்டபோது தற்போதும் தான் தண்டிக்கப்படுவதாக கூறியிருந்தார். தன்னை நேசித்தவர்கள் கூட தன்னிடமிருந்து விலகிவிட்டதாகவும் சக தோழிகள் நம்பாவிட்டால் எப்படி நான் மேற்படிப்பு வரை அவர்களுடன் படிக்க முடியும் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் அந்த மாணவி.

இந்த கடிதத்தை படித்தபின் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 3 வருடங்களுக்கு முன்பு இன்னொரு மாணவியின் உணவை இவர் சாப்பிட்டு உள்ளார். அதற்கு சீனியர் மாணவிகள் 48 பேர் ஒன்றாக சேர்ந்து ஜூனியர் மாணவியை அடித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்குபிறகு அந்த மாணவியிடம் யாரும் பேசவில்லை என கூறப்படுகிறது. வகுப்பில் சக மாணவிகளின் புறக்கணிப்பால் 11 -ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.