கணவன் வெளியூரில்..! வீட்டில் மாமனார் டார்ச்சர்..! மாடியில் இருந்து குதித்த புதுப்பெண்..! அதிர்ச்சி காரணம்!

காதலித்து திருமணம் செய்து 11 மாதங்களுக்குள் வரதட்சணை கொடுமையின் காரணமாக வீட்டின் 2-வது மாடியிலிருந்து கீழே குதித்துவிட்டார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பண்ருட்டியைச் சேர்ந்த செந்தில்நாதனுக்கு, சென்னை சேர்ந்த விக்னி நாக நந்தினி என்பவருக்கும் அன்று 23.6.2019-ல் திருமணம் நடந்தது.இருவருக்கும் குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. செந்தில்நாதன் கிண்டியில் உள்ள ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்துவந்தார்.

இந்நிலையில், திருமணம் முடிந்து ஒரு வாரத்தில் வேலைக்காக செந்தில்நாதன் சென்னை வந்துவிட்டார். மனைவியை தனது வீட்டில் விட்டு அவரும் சென்றுள்ளார். இதற்கிடையில், மாமனார் சீனிவாசன், மாமியார் வசந்தகுமாரி, நாத்தனார் சீதாலட்சுமி ஆகியோர் சேர்ந்து பலவிதங்களில் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். குறிப்பாக, நகை வேண்டும் என்று வரதட்சணை கொடுமை செய்து வந்துள்ளனர்.

கொடுமைகளை தாங்க முடியாமல், தனது பெற்றோர்களிடம் அடிக்கடி சொல்லி அழுவாள். அவர்களும் சமாதானம் செய்து வைத்துள்ளார்கள். கடந்த 2 மாதத்திற்கு முன்பு நந்தினியை வரதட்சணை கேட்டு அடித்து துரத்திவிட்டனர். இது குறித்து நந்தினியின் சகோதரி அவர்கள் தங்கை கணவரிடம் நியாயத்தைக் கேட்ட போது `நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போகிறேன். நீ செத்துப் போ' என மிரட்டியுள்ளார்.

சம்பவத்தன்று உறவுக்காரப் பெண்ணுடன் நந்தினிக்கு எஸ்.எம்.எஸ்- ல் வாக்குவாதம் நடந்துள்ளது. அதில் செந்தில்நாதனிடம் நந்தினி தெரிவித்தபோது, `உன்னுடன் வாழ விருப்பம் இல்லை செத்துத் தொலை' என மிரட்டியுள்ளார்.  

இதன் காரணமாக வேதனை தாங்க முடியாத நந்தினி தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து வீட்டின் 2-வது மாடியிலிருந்து கீழே குதித்துவிட்டார். இதில் அவருக்கு 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு பற்கள் உடைந்து உதடுகள் கிழிந்துவிட்டன.

பின்னர் அக்கம்பக்கத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இதனையடுத்து, நந்தினியின் சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஷோபாராணி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்கு பதிந்து விசாரித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விக்னி நாக நந்தினி, தன்னுடைய செல்போனிலிருந்து செந்தில்நாதனுக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதனடிப்படையில் செந்தில்நாதனிடம் விசாரணை நடத்தி அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் செந்தில்நாதனின் பெற்றோர் மற்றும் சகோதரியை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.