காய்ச்சல் என ஹாஸ்பிடல் சென்ற இளைஞன்! கிட்னி பெயிலியர் என டயாலிசிஸ் செய்த டாக்டர்களின் கொடூரம்!

பிம்ப்ரி: தனக்கு தவறாக டயாலிசிஸ் செய்த மருத்துவமனை மீது வழக்கு தொடரப் போவதாக பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார்.


மகாராஷ்டிரா மாநிலம், பிம்ப்ரி பகுதியை சேர்ந்த ஆனந்த் அனில்வால் என்பவர், யஷ்வந்த்ராவ் சவான் மெமோரியல் ஹாஸ்பிடலில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு 2 சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டதாகக் கூறி, டயலாசிஸ் செய்துள்ளனர். ஆனால், மிகச் சிறிய வயதில் எப்படி இத்தகைய பாதிப்பு ஏற்படும் என அவரும், அவரது குடும்பத்தினரும் சந்தேகம் எழுப்பினர். 

இதையடுத்து, மருத்துவமனையில் பெரும் பிரச்னை வெடிக்கவே, இதுபற்றி விசாரணை நடத்திய மருத்துவமனை நிர்வாகம்,  தவறான முறையில் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க நேரிட்டுவிட்டதாக, தவறை ஒப்புக் கொண்டுவிட்டது. இதையடுத்து, சாதாரண காய்ச்சலுக்கு தனக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்து, உடல்நிலையை பலவீனமாக்கியதாக, சம்பந்தப்பட்ட இளைஞர் அந்த மருத்துவமனை மீது புகார் எழுப்பியுள்ளார். இதன்பேரில், வழக்கு தொடரப் போவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.    

சாதாரண காய்ச்சலுக்கு சென்ற நபரை சினிமா காமெடி போல டயாலிசிஸ் செய்த மருத்துவர்களுக்கு கண்டனம் குவிந்து வருகிறது.