தஞ்சாவூரில் இளம் பெண் கொலையை மறைத்து இயற்கை மரணமாக மாற்ற முயற்ச்சி. ஆமை வேகத்தில் RTO விசாரணை. 6 நாட்களாக நடவடிக்கை ஏதும் எடுக்காத காவல்துறை. புகார் கொடுத்த சகோதரியையும் நேற்று மதியம் கொலை செய்ய முயற்சி கொலை வெறி தாக்குதல்.
இளம் பெண் மர்ம மரணம்! 6 நாட்களாக நடவடிக்கை இல்லை! புகார் அளித்த சகோதரி மீது கொலைவெறி தாக்குதல்! தகிக்கும் தஞ்சை!

தஞ்சாவூர் மாவட்டம் திருநா இருப்பு கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் , மல்லிகா தம்பதியின் 3 வது பெண்ணான வனிதா வயது 33. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வீட்டு வேலை செய்து வந்தார்.இந்நிலையில் ஒரத்தநாடு தாலுகா பெரிய பொன்னாப்பூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் ஜெயராமன் ( வயது 42 ) இவருக்கும் காதல் ஏற்பட்டது .
ஜெயராமனுக்கு பெற்றோர்கள் இல்லாத காரணத்தினால் .. இவரின் உறவினரான திருநா இருப்பு கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி என்பவர். நான் உங்களுக்கு திருமணம் செயது வைக்கின்றேன் என வனிதாவை மூளை சலவை செய்து..
அவர் வெளிநாட்டில் சம்பாரித்து தனது திருமணத்திற்காக சேர்த்து வைத்த பணம் 10 லட்சம் மற்றும் 25 பவுன் நகைகளை ஏமாற்றி வாங்கி விட்டனர்.. வனிதாவி்ன் பெற்றோர்களுக்கு தெரியாமல் கலியமூர்த்தி திருமணம் செயது தஞ்சாவூரில் பொன்னாப்பூர் கிராமத்தில் குடி வைத்து இருந்தார் .. ஜெயராமன் வனிதா விற்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளது.
நாளடைவில் வனிதாவின் கணவர் ஜெயராமன் குடித்து விட்டு அடிக்கடி பணம் கேட்டு இளம்பெண் வனிதாவை துன்புறுத்தி வந்தார் . ஒவ்வொரு முறையும் அடி உதை தாங்க முடியாமல் வனிதா தனது பெற்றோரிடம் பணம் வாங்கிக்கொண்டு கணவரிடம் கொடுத்து வந்தார் .
நல்லவன் என்று நம்பி காதல் செயது தனது வாழ்கை இவ்்வாறு ஒரு குடிகாரனிடம் மாட்டிக்கொண்டோம் என்று தனது உறவினரிடம் அழுதுபுலம்பி வந்தார். கடந்த மாதம் ஒரு லட்சம் பணம் கொண்டுவா என கணவர் கொடுமை செய்த்துள்ளார் .ஆனால் வனிதாவால் பணம் ஏற்பாடு செய்ய முடியவில்லை .
ஜெயராமன் லாரி டிரைவர் என்பதால் வெளியூர் சென்று 15 நாட்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 27 ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு அதிகளவு போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இனிமேல் இவளிடம் பணம் ஏதும் இல்லை எனவே வனிதாவை கொலை செய்ய வே்ண்டும் என்று திட்டம் தீட்டி இரவு 9:00 மணியளவில் அடித்து..
குரல் வளையை நெரித்து ...தலையணை வைத்து மூச்சை திணறடித்து கொலை செயது விட்டு இரவே குழி தோண்டி புதைக்க உறவினர் கலியமூரத்தி அவரது மகன் கண்ணு (34) ஏற்பாடு செய்தனர் ..கிராம மக்கள் பார்த்தால் மாட்டிக்கொள்வோம் என்று பயந்து கொண்டு .. தனது மனைவி மாரடைப்பால் காலமாகிவிட்டார் என்று தனது கிராமத்தினரை நம்ப வைத்து சடலத்தை உடனடியாக எரிக்க முயற்சி செய்தனர் ....
தன் மகள் இறந்த தகவல் அறிந்த வனிதாவி தாயார் மல்லிகாவும் , சகோதரி செல்வி ஆகியோர் இறந்த சடலத்தை பார்த்த போது.. இரத்த காயங்களுடன் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை அறிந்து ஒரத்தநாடு காவல்நிலையத்தில் புகார் அளிதர்.
புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறை உதவி ஆய்வாளர் N.சேகர் .இறந்த வனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனை செய்தனர் .
பிரேதபரிசோதனையில் வனிதா கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டாலும் ..இன்று வரை கொலை செய்த கணவர் ஜெயராமன் மீதும் .. கொலை திட்டம் தய கலியமமீதும் எந்த ஒரு நடவடிக்கையும் காவல்துறை எடுக்க வில்லை .
கொலை செய்த ஜெயராமன் மீது காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு பெண்ணை ஏமாற்றி அவளது வயிற்றில் குழந்தை உண்டாக்கி .. குழந்தை இறந்து இருப்பது குறித்த வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிட தக்கது .
ஜெயராமன் தற்போது தலைார் காவல்துறை நடவடிக்கை என்ன எடுக்க உள்ளது என கேட்டால்... இதனை RTO விசாரணைக்கு உள்ளது என்கின்றனர்.RTO எந்த ஒரு விசாரணையும் வனிதாவின் பெற்றோரிடம் நடத்த வில்லை.
ஜெயராமனுக்கு தண்டனை ஏதும் கொடுக்காமல் தப்பவிட்டால் இனிமேல் இதுபோல பல கொலைகள் ... இயற்கை மரணங்களாகவோ அல்லது தற்கொலைகளாக மாற்றப்படும் ... அப்பாவி பெண்கள் பலர் ஏமாற்றபடுவார்கள்.
இது போன்று இனீமேல் நிகழாவண்ணம் தடுக்கவும்.. தனது தங்கையின் கொலை குறித்து நியாயம் வேண்டி காவல் நிலையத்தில் புகார் செய்த கொலை செய்யப்பட்ட வனிதாவின் சகோதரி செல்வியை .. நேற்று October 1 மதியம் 3:30 மணியளவில் கலியமூர்த்தியின் தூண்டுதலின் பேரில் மகன் தினேஷ் (21) திருநாயிருப்பு கிராமத்தில் வைத்து கழுத்தை நெரித்து...கையை முறித்து ...
வனிதாவை கொலை செய்தது போல .. உன்னையும் கொலை செய்கிறேன் என கூறிக்கொண்டு.. கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டு.. கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். செல்வி தற்போது தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் .
இந்த கொலைகார கும்பலிடம் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்று செல்வி அஞ்சிவருகிறார் .. இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் பல கொலை சம்பவம் நிகழாவண்ணம் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா ?? அல்லது மெத்தனம் காட்டிவருமா ??