ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க 13.50 கோடி முகக்கவசங்களை கொள்முதல் செய்வதற்காக விலை நிர்ணயக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த செய்திதான் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
ரேஷன் கடையில் மாஸ்க் தரச்சொல்லி யாருங்க கேட்டது..? அப்படியே குடுக்குறதுன்னா, வீட்டுக்கே போய் கொடுங்க ப்ளீஸ்

இப்போது கிட்டத்தட்ட எல்லோரும் மாஸ்க் உபயோகிக்கிறார்கள். அதாவது சேலையை, துப்பட்டாவை அல்லது 10 ரூபாய்க்கு விலை குறைவான மாஸ்க் வாங்கி உபயோகித்து வருகிறார்கள். அவர்கள் யாரும் யாரிடமும் இதை கேட்கவே இல்லை. பின் எதற்காக இதனை வாங்க வேண்டும்..?
மாஸ்க் கொள்முதல் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில், ‘கொரோனா தொற்றை தவிர்ப்பதற்கு தமிழக அரசு அவ்வப்போது உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் விலையில்லாத துணியிலான முககவசங்களை வாங்கி வழங்குவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
தமிழகத்தில் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 குடும்ப உறுப்பினர்களை கொண்ட 2 கோடியே 8 லட்சத்து 23 ஆயிரத்து 76 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதை கணக்கிடும்போது, தலா ஒருவருக்கு 2 தரமான மறுபடியும் உபயோகிக்கத்தக்கதான 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 துணி முககவசங்கள் வாங்கப்பட வேண்டும்.
அவசர காலத்தில் பாதுகாப்பு உபகரணமாக இதை கொள்முதல் செய்யப்பட வேண்டி உள்ளது. எனவே அவசர கொள்முதலை மேற்கொள்ளலாம். இந்த கொள்முதலுக்கான விலைப்புள்ளியை மதிப்பிடுவதற்காக விலை நிர்ணயக் குழுவை அமைக்க வேண்டும் என்று அரசை வருவாய் நிர்வாக ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கான ஒப்பந்தத்தை பெறுவதில் வெற்றி பெறும் ஏலதாரருக்கு அதற்கான ஒப்பந்தத்தை அரசு வழங்கலாம் என்று கூறியுள்ளார்.
அவரது கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு விலை நிர்ணயக் குழுவை அமைத்து அரசு உத்தரவிடுகிறது. இந்தக் குழுவின் தலைவராக வருவாய் நிர்வாக ஆணையர் செயல்படுவார். இயற்கை பேரிடர் மேலாண்மை இயக்குனர், பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனர் உள்பட 6 பேர் அந்தக் குழுவில் இடம் பெறுவார்களாம்.
மாஸ்க் அணிவது கட்டாயம்தான், ஆனால், இதை வாங்குவதற்கு மக்களை கூட்டமாக வரவழைத்துவிட வேண்டாம். டோக்கன் கொடுப்பது போன்று வீடு வீடாக சென்று கொடுத்தாலே போதும். அரசு செய்யுமா இதனை..?
மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய முகக்கவசத்தின் தரம் மற்றும் வகை பற்றி இந்த குழு முடிவு செய்யும். இதற்கான விலையை திருப்திகரமாக இந்தக் குழு நிர்ணயிக்க வேண்டும். ஒப்பந்த விலை மற்றும் ஏலத்தில் வெற்றி பெற்றவரை முடிவு செய்து அரசுக்கு தகுந்த பரிந்துரையை இந்தக் குழு வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.