பண்டா: இளம்பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தவர்கள், அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டனர்.
6 ஆண்கள்..! ஒருவன் பின் மற்றொருவன்..! இளம் பெண்ணை மாறி மாறி கற்பழித்து வீடியோ! உறவுக்கார இளைஞன் முன்னிலையில் நிகழ்ந்த விபரீதம்!
உத்தரப் பிரதேச மாநிலம் சித்ராகூட் பகுதியை சேர்ந்த பெண், உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பியபோது, நடுவழியில் மாவு என்ற இடத்தில் 6 இளைஞர்கள் வழிமறித்துள்ளனர். அவரை மரத்தில் கட்டிப் போட்டு, கதற கதற அவர்கள் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். அந்த சம்பவத்தை செல்ஃபோனிலும் வீடியோ எடுத்து, இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதன்பேரில் பாதிக்கப்பட்ட பெண், உள்ளூர் போலீசில் புகார் தர, உரிய நடவடிக்கை எடுக்க போலீசார் மறுத்துவிட்டனர். இதற்கிடையே இளம்பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டதை தொடர்ந்து, சித்ராகூட் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளார். தற்போது, மாவு பகுதி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.