தலைவலியால் குழந்தைகள் அழும்போது அது வேறு பிரச்சனை என தெரிந்துகொள்ளுங்கள் !!

அடிக்கடி தலைவலியினால் சில பிள்ளைகள் பாதிக்கப்படுவதுண்டு. தலை வலிக்கும்போது எரிச்சல், கோபம், வேதனையில் குழந்தைகள் துடிப்பதுண்டு. தலைவலி என்பது நோய் அல்ல, வேறு சில பிரச்னைகளின் அறிகுறி என்பதை அறிந்துகொண்டு, அதனை தீர்க்க முயலவேண்டும்.


• போதுமான தூக்கம் இல்லாமல் தலை வலிக்கலாம். அதனால் தினமும் போதுமான நேரம் குழந்தையை தூங்கவைக்க வேண்டும்.

• நீண்ட நேரம் பசியோடு இருப்பதும், அதிகமாக உணவு உட்கொண்டு செரிக்காதபோதும் தலைவலி உண்டாகலாம்.

• தொடர்ந்து நீண்ட நேரம் வீடியோ கேம்ஸ் ஆடுவது, தொலைக்காட்சி பார்ப்பது போன்றவையும் தலைவலிக்கு காரணமாகலாம்.

• வாசனை திரவியங்கள், ஊதுபத்தி, சாம்பிராணி போன்ற கடுமையான மணமும் குழந்தைக்கு தலைவலியை உண்டாக்கலாம்.

இதுமட்டுமின்றி காய்ச்சல், புண் போன்ற பிரச்னைகளாலும் தலை வலி உண்டாகலாம்.  தலைவலியுடன் வாந்தி, காய்ச்சல் தொடரும்போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.