லலிதா ஜீவல்லரி நகைக் கடையில் சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை போயுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி லலிதா ஜூவல்லரிக்குள் புகுந்த கொள்ளையர்கள்! ரூ.50 கோடி நகைகள் கொள்ளை! ஒரு புளோரையே மொட்டை அடித்தனர்!

தமிழகம், ஆந்திரா, தெலுங்கான உள்ளிட்ட மாநிலங்களில் லலிதா ஜூவல்லரி நகை கடை செயல்பட்டு வருகிறது. தீபாவளி சமயம் என்பதால் அவர்கள் அளிக்கும் சலுகைகளை பெற நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
சென்னையில் தலைமையகமாக செயல்பட்டு வரும் லலிதா ஜூவல்லரியின் கிளை ஒன்று திருச்சியிலும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் நகைக் கடையின் சுவற்றை துளையிட்டு சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை அள்ளிச் சென்றதாக கூறப்படுகிறது.
கோடிக்கணக்கான நகைகள் இருக்கும் கட்டிடத்தில் இரவில் செக்ரியூட்டி என்ன செய்து கொண்டார்கள் என்ற கேள்வி எழுகிறது. கட்டிடத்தை சுவற்றை துளையிடும்போது இரவில் சப்தம் வராதா? அந்த சப்தம் கூட கேட்காத அளவுக்கு காவலாளிகள் தூங்கி கொண்டிருந்தார்களா? அல்லது காவலாளிகளே நகைக் கடையில் கொள்ளை போவதற்கு துணைபோனார்களா என்ற கோணத்தில் எல்லாம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர். சென்னை முழுவதும் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதால் இங்கு கைவரிசை காட்டினால் மாட்டிக்கொள்வோம் என்பதை அறிந்த கொள்ளையர்கள் தற்போது புறநகர் பகுதிகளை தேடி செல்கின்றனர். உழைத்து கொள்ளையடிக்க…