பைக்கில் கணவனுடன் சென்ற பெண் தலையில் லத்தியால் ஓங்கி அடித்த போலீஸ்! பதற வைக்கும் காரணம்! வைரல் போட்டோ!

ராமநாதபுரத்தைச் சேர்ந்த வெள்ளுர் என்பவர் மனைவி மாரிக்கண்ணு மற்றும் கண்ணண் ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் துரத்தியேந்தல் பகுதிக்குச் சென்றுள்ளனர்.


அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலிசார் 3 பேர் ஒரே வாகனத்தில் வருவதை பார்த்து அவர்களை நிறுத்தச் சொல்லியிருக்கிறார். அப்போது போலிசார் மாரிக்கண்ணு தலையில் லத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மாரிக்கண்ணுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் எல்லோரும் போலிசாரிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக வெளியான செய்தியை அறிந்து மனித உரிமைகள் ஆணைய நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ் வழக்கைத் தாமாகவே முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இது குறித்து ராமநாதபுரம் எஸ்.பி ஓம்பிரகாஷ் ,மற்றும் மீனா இரண்டு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.