பஞ்சாப் மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் 10 முதல் 11 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.
பத்து பேர் கும்பலிடம் சிக்கிய காதலனுடன் சென்ற இளம் பெண்! மாறி மாறி இச்சையை தீர்த்த கொடூரம்!

லூதியானாவைச் சேர்ந்தவர் அந்த 20 வயது இளம்பெண். கடந்த 9-ஆம் தேதி அவர் காரில் ஒரு நண்பருடன் அருகில் உள்ள இஸ்ஸெவல் என்ற கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தார்.
அந்த கிராமத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது ஒதுக்குப் புறமான இடத்தில் அவர்களது காரை இரு சக்கர வாகனத்தில் இருவர் வழிமறித்ததாக கூறுகிறார் அந்த இளம் பெண். இதனைத் தொடர்ந்து அவர்கள் தங்கள் கார் மீது செங்கற்களைக் கொண்டு தாக்கியதாகவும் தெரிவிக்கிறார்.
தங்கள் இருவரையும் காரை விட்டு வெளியே இழுத்துச் சென்றதாகவும் அவர் கூறுகிறார். பின்னர் வேறுபலரை அவர்கள் அழைத்ததாகவும், தன்னை ஒரு மறைவிடத்துக்கு கொண்டு சென்ற அவர்கள் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த 9-ஆம் தேதி அரங்கேறிய நிலையில் அவர்களால் விடுவிக்கப்பட்ட பின் 10-ஆம் தேதி அந்தப் பெண் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தபின் தான் இது வெளிச்சத்துக்கு வந்தது. இளம்பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மனித உருவத்தில் இருக்கும் 5 அறிவுப் பிராணிகளின் மிருக இச்சைக்கு பெண்கள் பலியாவது பல்வேறு மாநிலங்களில் சாபக்கேடாகத் தொடர்ந்து வருகிறது.