திரும்பிய பக்கம் எல்லாம் பக்தர்கள் வெள்ளம்! களைகட்டிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோலாகலம்-ஆண்டாள் கோவில் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுதூரில் உள்ள ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. மேலும் இத்திருவிழாவில் தினமும் ஆண்டாள்-ரெங்கமன்னார் வீதி உலா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முக்கிய நாளான இன்று காலையில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. தேரில் 7 வடங்கள் இணைக்கப்பட்டுள்ளன எனவும்,இதில் 2 வடங்கள் பெண்களுக்குகாக ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி ,மற்றும் பல எம்.எல்.ஏக்கள் சந்திரபாபு, கலெக்டர் சிவஞானம், ஆகியோர் தேரை பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதுமட்டுமின்றி இத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்த கோடிகள் திரண்டுள்ளனர்.