காங்கிரஸ் இடைக்கால தலைவராக உள்ள சோனியாகாந்தியின் பதவிக்காலம் கடந்த 10-ம் தேதியுடன் முடிவடைந்ததை அடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக மீண்டும் சோனியா… இது சரிதானா..?

புதிய தலைவராக நேருவின் குடும்பத்தில் இல்லாத ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு தலைவர் பதவியை இன்னமும் 6 மாதங்கள் சோனியா காந்தியே வகிப்பார் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நேரு குடும்பத்தைத் தவிர தலைமை பதவிக்குத் தகுதியானவர்கள் யாரும் இல்லையா என்ற கேள்விக்குப் பின்னே, இப்போதைக்கு இதுதான் நல்லது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கருதுகின்றனர்.
ஏனென்றால், இந்த குடும்பத்தினர் காங்கிரஸ் கட்சிக்கு தலைமையேற்பதை பாஜக,மோடி,அமித்ஷா விரும்பவில்லை.இந்த அளவுக்கேனும் காங்கிரஸ் நீடித்திருக்க சோனியாவின் தலைமைதான் காரணம். தேர்தல் அரசியலுக்கு முகங்கள் தான் தேவை. இப்போதைக்கு காந்தி குடும்பம்தான் காங்கிரசுக்கு தேவை.அதற்கு வெளியில் தலைவரை தேட வேண்டும் என்றால் 15 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும்.
அல்லது, அடுத்த 15 ஆண்டுகளில் வேறு தலைமைக்கு கட்சி மாறலாம். மற்றபடி இப்போது காங்கிரஸ் தலைமை சோனியா, ராகுல், ப்ரியங்கா கைகளில் இருந்து சென்றால் அது மோடிக்கு கொண்டாட்டம் ஆகி விடும். மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது.
அதனால் சோனியாவே இருக்கட்டும் என தெரிவித்துள்ளனர். சரியான தலைமை இல்லாத ஒரு கட்சியால் எப்படி எதிர்க்கட்சியாக இருக்க முடியும் என்பதுதான் கேள்வி. விரைவில் ராகுலோ அல்லது வேறு ஒருவரோ முழுமையான தலைவர் வேண்டும்.