புதுச்சேரியில், தந்தையே மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து, சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மனைவியின் மகளுக்கு கணவனால் ஏற்பட்ட விபரீத அனுபவம்! கதறிய 26 வயது பெண்! புதுச்சேரி அதிர்ச்சி!
பாண்டிச்சேரி யை சேர்ந்த தனலஷ்மி தனது முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இரண்டாவதாக ஆட்டோ டிரைவர் லோகையன் ஐ திருமண செய்துள்ளார். முதல் கணவருக்கு பிறந்த மகள் பானு (வயது 26) உடன் இணைந்து வாழ்ந்து வந்த தனலஷ்மிக்கு இரண்டாவதாக ஒரு மகன் பிறந்துள்ளார்.
ஆரம்பத்தில் பானு மீது அன்பாக இருந்த லோகையன் காலப்போக்கில் அவரை அடித்து உதைத்து சித்திரவதை செய்து வந்துள்ளாதாக தெரிகிறது, மேலும் பானு பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தபட்டுள்ளார்.
இதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என லோகையன் மிரட்ட செய்வது அறியாமல் தவித்து வந்த இளம் பெண் பானு ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், காவல் துறையை அணுக, விசாரணைக்கு பின்னர் ஆட்டோ டிரைவர் லோகையன் மீது சி.பி.சி.ஐ.டி 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது.