கம்ப்யூட்டர் முன்னாடியே அமர்ந்து கொண்டு வேலை பார்ப்பவர்களா நீங்கள்? அப்போ இதை கண்டிப்பா படிங்க!

மென்பொறியாளர்கள் அல்லது எப்போதும் கம்ப்யூட்டர் முன்னாடி அமர்ந்து கொண்டு வேலை செய்யும் நபர்களுக்கு மிக முக்கியமாக இதை அறிந்துகொள்ள வேண்டும்.


இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் திரைக்கு முன்னால் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் தினமும் நல்லெண்ணெய் சாப்பிட்டால் உடலுக்கு அந்த அளவுக்கு நல்லது ஏற்படும். நீங்கள் கட்டாயம் எண்ணெய் குளியல் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் கணினி மூலம் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து உடல் நலத்தை பாதுகாத்து கொள்ள முடியும். 

நல்லெண்ணெயும் மிக முக்கியமான ஒன்று. தினமும் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும். வாரத்தில் ஒரு நாள் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு குறைய தொடங்கும். தலைவலி, உடல் வலி அனைத்தும் குறைந்துவிடும்.

உடல் சூட்டால் அதிக கட்டிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதை போன்ற பெண்களைப் பொறுத்தவரை கர்ப்பப்பை கோளாறு எதுவும் ஏற்படாமல்  இருக்க இதை செய்ய வேண்டும். இன்றைய காலகட்டத்தில் குழந்தை வரம் வேண்டி பல பெண்கள் எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

ஆனால் அதற்குப் பின்னுள்ள காரணங்களை பற்றி எதையும் யோசிப்பது கிடையாது. எனவே உடல் சூட்டை தணிக்கும் கணினி பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கும் மிக சிறந்த ஒன்று வாரத்திற்கு ஒரு நாள் நல்லெண்ணெய் கொண்டு குளிப்பது மிகவும் சிறந்தது.