நேரத்துக்கு ஏற்ப எப்படி அலங்காரம் செய்யவேண்டும் என்று என்று தெரியுமா?

பெண்கள் அழகுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் குறிப்பிட்ட அளவு ஆடைகளுக்கும் நகைகளுக்கும் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.


முதலில் அணிகலன்கள் என்பனவற்றைப் பார்க்கலாம்சிலருக்கு எந்த அணிகலனும் அணியாமல் இருந்தாலே 

அழகாக இருப்பார்கள்அதனால் அணிகலன்கள் அழகுக்கு அத்தனை முக்கியமானவை அல்ல என்றாலும்

ஆடைஒப்பனைஹேர்ஸ்டைல் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு நகைகளை அணிந்து கொண்டால்தான் அழகாக 

இருக்கும்.

 

பட்டுப்புடவை கட்டிபுதுமையான தலை அலங்காரம் செய்து நகைகள் அணியாமல் இருந்தால்அத்தனை 

அழகும் பாழாகி விடும்அதனால் கற்களால்முத்துக்களால்தங்கம்வெள்ளிவைரம் ஆகியவற்றால் 

அழகு கிடைக்கலாம்ஆனால் அதற்கேற்ற விழாக்கள்உடைகள் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு நகை அணிய 

வேண்டும் என்பதுதான் முக்கியம்.

 

நிறைய நகைகள் இருக்கின்றன என்பதற்காக இருக்கும் அத்தனை நகைகளையும் அணிந்து கொள்வது 

அழகுக்கு இலக்கணமல்லஏனென்றால் இப்போது திருமணங்களுக்குகூட குறைவான நகைகள் அணிவதுதான்

 ஃபேஷன்.

 

அதேபோன்றுகுளித்து முடித்து அலங்காரம் செய்யும் நேரத்தில் கண்ணாடியின் முன் உட்கார்ந்து கொண்டு 

என்ன உடை அணிவதுஎன்ன நகை அணிவது என்று யோசிப்பவர்கள்தான் அதிகம்இதுதான் பல்வேறு 

அழகின்மைக்கு அடிப்படைக் காரணமாக அமைந்து விடுகிறது.

 

ஆம்முதல் நாள் இரவேசெல்ல வேண்டிய இடம்நேரம்அங்கே இருக்க ஆகும் காலம் ஆகியவற்றைப் பொறுத்து

 அதற்கேற்ப ஆடைகளையும்அணிய வேண்டிய நகைகளையும் எடுத்து வைத்துவிட வேண்டும்குறைந்தபட்சம் 

மனதிலாவது குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்உடைநகை மட்டுமின்றி போடவேண்டிய ஹேண்ட் பாக்

செருப்புபூபொட்டு போன்றவற்றையும் முன்னரே தீர்மானித்து விட்டால்அலங்காரத்திற்கு கூடுதல் நேரம் 

எடுத்துக் கொள்ள முடியும்.