கல்லூரி அதிபர் உல்லாசத்துக்கு மாணவிகள் ஏற்பாடு! 2 பெண் ஆசிரியைகள் செய்த கேவலமான செயல்!

பெண் ஊழியர்களின் உதவியுடன் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த தனியார் கல்லூரி நிறுவனரை போலீசார் கைது செய்தனர்.


சமீபகாலமாக, எந்த துறையை சேர்ந்தவராக இருந்தாலும், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு, சிக்கிக் கொள்வது வழக்கமாக உள்ளது. இதன்படி, நாகர்கோவில் அருகே செயல்படும் தனியார் கல்லூரி நிறுவனர் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். 

நாகர்கோவிலை அடுத்த இறைச்சக்குளத்தில் அமைந்துள்ளது ஜேக்கப் பாரா மெடிக்கல். இங்கு சுமார் 80 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 10 பணியாளர்கள் வேலைசெய்து வந்தனர். இந்தக் கல்லூரியின் நிறுவனர் ரவி. இவர் இரண்டு பெண் ஊழியர்களின் துணையோடு ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ரவி தனது அறைக்கு ஓர் ஆசிரியையை அழைத்து, அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ரவியின் அறையிலிருந்து கலங்கிய கண்களுடன் அந்த ஆசிரியை வெளியே வந்துள்ளார். இதைக் கவனித்த மாணவிகள் ஏன் அழுகிறீர்கள் என ஆசிரியரிடம் கேட்டுள்ளனர்.

மேலும் இதுபற்றி அந்த ஆசிரியரின் பெற்றோரிடமும் மாணவிகள் கூறியுள்ளனர். பெற்றோர் விசாரித்ததில் ரவியின் பாலியல் தொல்லை விவகாரம் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து அந்த ஆசிரியை பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆசிரியைகள், மாணவிகளை ஏ.எஸ்.பி. ஜவகர் தலைமையில் காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில், ஆசிரியைகள்  மட்டுமின்றி, மாணவிகள் என அனைவரும் பாலியல் தொல்லை தருவதாக, ரவி மீது  புகார் கூறினர். குற்றம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, உடனடியாக, கல்லூரி நிறுவனர் ரவியை போலீசார் கைது செய்தனர்.

இதில் கொடுமை என்ன என்றால் ரவிக்கு பெண்களை மாமா வேலை செய்து பெண் ஆசிரியைகள் இருவரே மாணவிகளை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.