அமைச்சர் சண்முகம் ஸ்டாலினை செய்த விமர்சனம்..! பச்சைத் துண்டு போட்டாலே விவசாயி ஆக முடியுமா..?

விழுப்புரம் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு குறை தீர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீதான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக இன்று நடைப்பெற்றது.


இவ்விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் அவர்கள் கலந்துகொண்டு விழுப்புரம், சிறுவந்தாடு , கோலியனூர் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த 865 பயனாளிகளுக்கு 1 கோடியே 3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் மாற்றுத் திறனாளிகள் விதவைகள் உதவித்தொகை மற்றும் முதியோருக்கான உதவித் தொகையினை வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை,உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சண்முகம், ‘’ அம்மாவின் ஆட்சி அமைய தேர்தலில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்று முதல்வரும் துணை முதல்வரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திப்பார்கள். 

 பச்சைக்கலர் வேஷம் போட்டவர் எல்லாம் விவசாய ஆகிவிட முடியுமா, ஏறு தூக்கியவர், இன்று போய் சேற்றை மிதித்தவர் எல்லாம் விவசாயியாகிவிட முடியுமா, உண்மையான விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாயத்தை செய்து கொண்டு இருப்பவர் தமிழக முதல்வர்…” என்று ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தார்.

அவர் மேலும், ‘விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க தான் திமுக விற்கு தெரியும் . நிலத்தையும், வீட்டை அபகரிப்பது தான் திமுகவினர் தொழில் என்றும், நீலிக் கண்ணீர் வடிக்கிறாரா ஸ்டாலின் என்றும் கேள்வி எழுப்பினார். திமுக மீது உள்ள மிக பெரிய 2 ஜி ஊழல் இதுவரை நடைப்பெறாத ஊழல் 2 லட்சம் கோடி ஊழல் செய்து நாட்டையே உலகத்தையே சுரண்டிய குடும்பம், திமுக கருணாநிதி குடும்பம்..” என்று கூறியிருக்கிறார்.