பள்ளி வகுப்பறையில் தாயின் புடவையில் தொங்கிய மாணவி! சடலத்தை டூவீலரில் தூக்கிச் சென்ற தந்தை! மதுரை பரபரப்பு!

மதுரையில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை புதூர் காந்திபுரம் பகுதியில் வசிக்கும் முத்து என்பவர் கொத்தனார் வேலை  செய்த வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், இளைய மகள் அர்ச்சனா, அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை பள்ளிக்குச் சென்ற அர்ச்சனா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் கதவு, ஜன்னல்களை மூடிவிட்டு அவர் இப்படிச் செய்ததாகவும், இதனை சக மாணவி ஒருவர் பார்த்து மற்றவர்களுக்கு தகவல் தெரிவித்தார் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த தகவல் மாணவியின் தந்தை முத்துவிற்கு தெரிவிக்கப்பட்டது.

அவர் பதறியடித்தபடி ஓடிவந்து, தனது மகளின் சடலத்தை மீட்டு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனை கொண்டு சென்றார். ஆனால், அவரது மகள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால், முத்து கதறியழுதார். இதற்கிடையே இச்சம்பவம் பற்றி பள்ளி நிர்வாகம் போலீசில் புகார் அளிக்கவே, மருத்துவமனை வளாகத்திற்கு வந்த போலீசார், மாணவியின் சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல விடாமல் தடுத்தனர்.

எனினும், விட்டுத் தராத முத்து, தனது உறவினர்கள் உதவியுடன் ஸ்கூட்டரில் சடலத்தை ஏற்றிச் செல்ல முயன்றார். இதன்பேரில், கூடுதல் போலீசார் அங்கு வந்து முத்துவையும், அவரது உறவினர்களையும் தடுக்கவே, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு, ஒருவழியாக, மாணவியை சடலத்தை மீட்ட போலீசார், அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக, அனுப்பி வைத்தனர்.  

இதுதொடர்பாக சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.