பெண்களை கொலை செய்வேன்! சடலங்களுடன் உடல் உறவு கொள்வேன் ! வீடியோவும் எடுப்பேன்..! போலீசாரை அதிர வைத்த நஸ்ருதீன்..!

லக்னோ: சடலங்களுடன் செக்ஸ் செய்வது ரொம்ப பிடிக்கும் என்று, சைக்கோ கொலையாளி ஒருவன் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளான்...


உத்தரப் பிரதேச மாநிலம், அசாம்கர் முபாரக்பூர் பகுதியில் வசித்து வந்த தம்பதியருக்கு, 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இந்த தம்பதியினர் 3 நாள் முன்பாக திடீரென கொலை செய்யப்பட்டனர். இவர்களின் குழந்தைகளில் ஒன்று கொல்லப்பட, ஒன்று மட்டும் உயிருடன் போராடிய நிலையில் போலீசார் மீட்டனர். இதன்பேரில் வழக்குப் பதிந்து கொலையாளியை தேடிய போலீசார், நஸ்ருதின் என்ற நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.  

ஆம், கைது செய்யப்பட்ட நஸ்ருதினுக்கு 38 வயதாகும் நிலையில், அவன் ஒரு சைக்கோ கொலையாளி என தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட வீட்டில் இருந்த தம்பதியினரை சுற்றி வளைத்து இரவு நரத்தில் நஸ்ருதின் அடித்துக் கொன்றுள்ளான். பிறகு, இறந்து போன பெண்ணின் சடலத்துடன் உடல் உறவு செய்துள்ளான்.

அதன்பின், அவர்களது 4 மாத குழந்தையை அடித்துக் கொன்றுவிட்டு, அதையும் பலாத்காரம் செய்திருக்கிறான். பின்னர், மற்றொரு அறையில் இருந்த 10 வயது மகளையும் கொலை செய்த பின், பலாத்காரம் செய்திருக்கிறான். இப்படி 3 மணிநேரத்திற்குள் 4 பேரை கொன்றுவிட்டு, அவர்களில் 3 பேருடன் செக்ஸ் செய்து, அதனை வீடியோவாக படம்பிடித்து, தனது உறவினர்களிடம் போட்டுக் காட்டி மகிழ்ந்துள்ளான் நஸ்ருதின்.  

இது மட்டுமின்றி, கடந்த சில ஆண்டுகளாக, டெல்லி, மேற்கு வங்கம், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் இதேபோல பல பேரை கொன்று, சடலத்துடன் செக்ஸ் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததாகவும் நஸ்ருதின் தெரிவித்துள்ளான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், தற்போது வழக்குப் பதிந்து நஸ்ருதினிடம் விரிவான விசாரணை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.