திருமணமாகி நான்கே மாதம்! தீக்குளித்து உயிரை மாய்த்த இளம் பெண்! கணவன் வீட்டு முன் சடலம் புதைப்பு? அதிர்ச்சி காரணம்!

தஞ்சையில் திருமணமான 4 மாதத்தில் மணப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் 30 , இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி 24, என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் திருமணமாகி குறுகிய காலத்திலேயே கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் ஒரே வீட்டில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் நவீன்குமார் புவனேஸ்வரியை கடுமையாக தாக்கி உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இதனால் பெருத்த மனவுளைச்சலுக்கு ஆளாக புவனேஸ்வரி கடந்த 18ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு பற்ற வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனே புவனேஸ்வரியை பேராவூரணி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த புவனேஸ்வரி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவரை கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக நவீன்குமார் வீட்டார் மீது மிகுந்த கோபத்தில் இருந்தனர்.

இதையடுத்து புவனேஸ்வரி இறந்த உடலை நவீன்குமார் வீட்டின் முன்பு தான் புதைக்க வேண்டும் என முடிவு செய்து அவரது வீட்டின் முன்பு குழி தோண்ட ஆரம்பித்தனர். இதனால் இரு வீட்டாருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது இதையடுத்து புவனேஸ்வரியின் உறவினர்கள் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்திய தாகவும் தெரிகிறது. இந்நிலையில் இந்த தகராறு குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புவனேஸ்வரியின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து வீட்டின் முன்பு புவனேஸ்வரியின் உடலை புதைப்பதை அவரது உறவினர்கள் கைவிட்டனர்.

இதையடுத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது திருமணமாகி நான்கு மாதத்தில் புது மணப் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரது கணவர் நவீன் குமார் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.