ஒக்கி புயலில் அரசு துரிதமாக செயல்பட்டிருந்தால் பல மீனவர்களை காப்பாற்றி இருக்கலாம்..இந்த பருவ மழை துவங்கியுள்ளது.. அரசை விழித்திருக்க சொல்லி கமல் காட்டம்!

சுனாமி, பெருமழை, பெருவெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களினால்சமுதாயத்தில் முதலில் பாதிக்கப்படுவது மீனவச்சமுதாயமே. ஒவ்வொரு பேரிடரின் போதும் படகுகள் காணாமல் போவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் முடியாத தொடர்கதையாகவே உள்ளது என மீனவர் சமுதாயத்துக்கு ஆதரவுக் குரல் எழுப்பியிருக்கிறார் கமல்ஹாசன்.


குறிப்பாக கடந்த 2017 நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், அரபிக் கடலில் வீசிய ஒக்கி புயல் தமிழக மற்றும் கேரள கடலோர மாவட்டங்களை நிலைகுலைய செய்தது. இதில் குமரி மாவட்டத்தின் மீனவ கிராமங்களில் மட்டும் 2000-க்கும் அதிகமான மீனவர்கள் காணாமல் போயினர். அப்போது மத்திய மாநில அரசுகள் மற்றும் கடலோரகாவற்படை துரிதமாக செயல்பட்டு இருந்தால் நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் . 

தற்போது பருவ மழை துவங்கியுள்ளசூழலில் மீண்டும் ஒரு புயலுக்கான சூழல் உருவாகலாம். எனவே அரசு கடந்த காலங்களில் செய்த அலட்சிய போக்கை  கைவிட்டு விட்டு, ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். 

1. கடல் அரிப்பு : பழவேற்க்காடு முதல் நீரோடி வரை உள்ள அனைத்து மீனவர் கிராமங்களில்கடல்நீர்உள்புகுவதை தடுப்பதற்குபாறைக்கற்களுக்கு பதிலாக, ஆறு மூலை கான்கிரீட் போடவேண்டும்.

2. ரேடியோதொலைபேசி : பேராபத்துகளில்மீனவர்களை காப்பாற்ற வழங்கப்படும் சேட்டிலைட் போன் மோசமான வானிலையின்போதுசிக்னல்இழப்பதால், அனைத்து ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளுக்குரேடியோ டெலிபோன் வழங்க வேண்டும். மீனவர்கள் இறந்த பிறகு பல லட்ச ரூபாய் நிவாரணமாகவழங்குவதை விட, அவர்களது உயிரை காப்பாற்றும்அத்தியாவசிய உயிர் பாதுகாப்பு கருவிகளை வழங்க அரசு முன்வர வேண்டும்.

3. மிதவை கவசம். ( Life jacket ) : கடலில் செல்லும் அனைத்து மீனவர்களுக்கும், தங்கள் உயிரை பாதுகாக்க ஏதுவாக பாதுகாப்பு கவசத்தை அரசே வழங்க வேண்டும்.

4. தொலை தொடர்பு மையம் : கன்னியாகுமரி மாவட்டத்தில் சக்திவாய்ந்த தொலைத்தொடர்பு மையம் ஏற்படுத்த வேண்டும். இது ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்கும் மீனவர்களை, அவசர நேரங்களில் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும். முன் அனுபவமும், தகுதியுள்ளமீனவர்களைஇம்மையத்தில் வேலைக்கு அமர்த்தவேண்டும்.

5. பேரிடர் மீட்பு குழு : தமிழகத்தில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும்பேரிடர் காலங்களில் கடலில் காணமல் போகும் மீனவர்களை உடனே மீட்பதற்கு, அப்பபகுதிமீனவர்களைக் கொண்ட “பேரிடர் கால மீட்புக் குழு" ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இக்குழுவில் தகுதியும் அனுபவமுள்ள அந்தந்தப் பகுதி மீனவர்களை கண்டறிந்து, பணியமர்த்த வேண்டும். ஒரு ஹெலிகாப்டர் மற்றும் அதிவேக மீட்பு படகுகள் இந்த குழுவுக்குவழங்கப்பட வேண்டும்.

6. கடல் ஆம்புலன்ஸ் : மீனவர்கள் விபத்தில் காயமுற்றாலோ, மீன் பிடிக்கும் போதுநோயினால் பாதிக்கப்பட்டாலோ அவர்களுக்கு உடனடி மருத்துவ சேவை வழங்க "கடல் ஆம்புலன்ஸ்" அமைக்க வேண்டும். ஆழ்கடலில் இறக்க நேரிட்டால் அவர்களது உடலை விரைந்து குடும்பத்தாரிடம் ஒப்படைக்க "அமரர் ஊர்தி" ஒன்றும் வழங்கப்பட வேண்டும்.

7. இழுவை படகுகள் : மீனவர்களின் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு கடலில் பழுதாகி நின்றால், அதனை மீட்டுவர இழுவைப்படகு அல்லது இழுவை கப்பல் வழங்கப்பட வேண்டும்.

8. வரி சலுகை : கடலில் இல்லாத சாலைக்கு சாலை வரி எதற்கு? தவிர மீனவர் படகால் சுற்று சூழல் பாதிக்கப்படாதசூழலில் மீனவர்கள் மீது விதிக்கப்படும் சாலை வரியும் பசுமை வழி வரியும் நீக்கப்பட வேண்டும். மீனவர்களுக்கு ஒவ்வொரு மீன்பிடி துறைமுகத்திலும் அரசு எரிபொருள் வினியோகம் செய்ய அரசு முன்வர வேண்டும்.  

9. கடற்படையில்மீனவ இளைஞர்கள் : நடுக்கடலில்நீந்துவது, நீச்சல் குளத்தில்நீந்துவது போல் அல்ல என்பதை உணர்ந்து கடற்படையில், தகுதியான கடற்பகுதிகளை சார்ந்த இளைஞர்கள் சேருவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.