விநாயகர் சதுர்த்தி முடிந்ததும், விநாயகர் சிலையை கையில் வைத்திருப்பது போன்ற ஒரு படத்தை ட்விட்டரில் பகிர்ந்தார் உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதி தேர்தலுக்காக இந்துக்களை ஏமாற்றுகிறார் … அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி

50 ஆண்டுகளாக தி.மு.க. கட்டிக் காப்பாற்றிய மாண்பை உதயநிதி குலைத்துவிட்டார் என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், நான் ஒரு பகுத்தறிவுவாதி என் மகளுக்காகவே பதிவிட்டேன் என்று ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் உதயநிதி.
இதுகுறித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ’தேர்தல் வருவதை மனதில் கொண்டு இந்துக்களை சமாதானப்படுத்தும் முயற்சி திமுகவினர் இறங்கி இருக்கிறார்கள்’ என குற்றம் சாட்டி இருக்கிறார். டுவிட்டரில் விநாயகர் சிலை படத்தினை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளது , இது அவர்களுக்கு (திமுக) ஏற்பட்டுள்ள காலத்தின் கட்டாயம், இந்துக்களை இழிவாக பேசுவதை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அதிமுக ஒன்றே குலம்,ஒருவனே தேவன் என்ற அண்ணாவின் வழியில் அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்தி வருகிறது. சிறுபான்மை மக்களை கவர வேண்டும் என்பதற்காக அவர்களை திமுக ஏமாற்றி வருகிறது. சி
றுபான்மை மக்களுக்கு அதிகமான உதவிகள் செய்தது அதிமுக, இந்துக்கள் உணர்வுகளைப் புரிந்து யார் மனதையும் புண்படுத்த கூடாது என்ற வகையில் மத நல்லிணக்கத்தோடு ஆட்சி செய்வது அதிமுக தான், அதிமுகவின் கொள்கையும் அதுதான்,மக்கள் திருநீறு பூசுவதை கூட சாம்பலைப் பூசுகிறார்கள் என்று பலமுறை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக ராமர் என்ன பாலம் கட்டினார், ராமர் என்ன பொறியாளரா, கட்டிட வல்லுனரா என்றும் விமர்சனம் செய்தவர்கள் திமுக,ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து கேவலமாக கவிதை எழுதினார். இதனை பலரும் எதிர்த்த பின்னர் அதில் அடக்கத்தை காட்டினார்கள், கந்த சஷ்டி கவசம் தொடர்பாக எழுந்த பிரச்சினையில் ஒட்டு மொத்த இந்து மக்கள் கொதித்து எழுந்த நேரத்தில் வேறு வழியில்லாமல் திமுகவினர் நிலைப்பாட்டை மாற்றி இருக்கிறார்கள் தவிர அது உண்மையான சொரூபம் அல்ல,தேர்தல் வருவதை மனதில் கொண்டு இந்துக்களை சமாதானப்படுத்தும் முயற்சி திமுகவினர் இறங்கி இருக்கிறார்கள்.