என்னதான் கணவனா இருந்தாலும் பொது இடத்தில் இப்படியா? நடிகையின் சில்மிஷ சேட்டை போட்டோ வைரல்!

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் நடித்து பிரபலமாகிய நடிகை தான் இலியானா.


இவர் நடித்த பல படங்கள் பெரும் வெற்றி படங்களாக அமைந்து உள்ளது. இவர் தற்போது ஹிந்தி படங்களில் நடிப்பதில் மிகவும் பிஸியாக உள்ளார். 

நடிகை இலியானா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த போட்டோகிராபர் "ஆன்ரூநீபோன்" என்பவரை திருமணம்  செய்து கொண்டார்.  இவர்கள் இருவரும் செய்த செயல் ஒன்று விடியோவாக வெளிவந்து சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

பொதுவாக இலியானாவின் சமூக வலைதள பக்கங்கள் முழுவதும் தன்னுடைய கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களாக நிறைந்து காணப்படும். இலியானாவின் கணவர் ஆன்ரூநீபோன், தன்னுடைய வேலை நிமித்தமாக தன்னுடைய தாயகமான ஆஸ்திரேலியாவிற்கு செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.  அப்போது தன்னுடைய கணவரை வழியனுப்பி வைப்பதற்காக நடிகை இலியானா அங்கு வந்து உள்ளார்.

அப்போது அவர் பொது இடம் என்று கூட பாராமல் தன்னுடைய கணவர் ஆன்ரூநீபோனை கட்டிப்பிடித்து முத்தம் இட்டுள்ளார். முத்தம் என்றால் சாதாரண முத்தம் இல்லை. அதுவும் இருக்கமான உதட்டு முத்தம். அப்போது அவரக்ள் கை வேறு சேட்டைகளை அரங்கேற்றியது. இந்த சம்பவம் வீடியோ மற்றும் புகைப்படமாக சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.  இதற்கு இவருடைய ரசிகர்கள் பலரும் பல விதமாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர். 

நடிகை இலியானா எப்போதும் நடிப்பு வேறு தனது சொந்த வாழ்க்கை வேறு என்பதில் மிக தெளிவாக இருப்பவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பல வெற்றிகளை சந்தித்த பின் தற்போது பாலிவுட்டிலும் கதாநாயகியாக கடந்த 2012-ஆம் ஆண்டு "பர்பி" என்ற திரைப்படம் மூலம் கால்பதித்து உள்ளார்.