பிரியங்கா ரெட்டி சடலத்தை லாரிக்குள் வைத்து மாறி மாறி கற்பழித்த நான்கு பேர்! விசாரணையில் அம்பலமான பகீர் தகவல்!

ஐதராபாத்: பிரியங்கா ரெட்டி பலாத்கார கொலை வழக்கில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.


சில நாட்கள் முன்பாக, தெலுங்கானாவில் உள்ள ஷாத்நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பிரியங்கா ரெட்டி எனும் டாக்டரை சுற்றி வளைத்த 4 பேர் பலாத்காரம் செய்து, தீயிலிட்டு கொன்றனர். இதன்பேரில், லாரி டிரைவர் பாஷா, அவரது உதவியாளர்கள் அரீஃப், சிவா, நவீன் மற்றும் சென்னகேசவலு ஆகியோரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இந்தியா முழுக்க பதைபதைப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம், குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் ரிமாண்ட் எடுத்து விசாரித்தபோது, அவர்கள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

இதன்படி, இருசக்கர வாகனம் பழுதாகி நின்ற பிரியங்காவை பலாத்காரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இரவு நேரம் என்பதால் உதவி செய்வதுபோல பேசி, பிறகு தங்களது லாரிக்குக் கொண்டு வந்துள்ளனர்.

அங்கு வைத்து, அவருக்கு கட்டாயப்படுத்தி மதுபானம் கொடுத்துள்ளனர். மது அருந்திய போதையில் இருந்த பிரியங்காவை, ஆயுதங்களால் தலையிலேயே அடித்துள்ளனர். இதில் அவர் மயக்கமாகி உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இறந்துபோனாலும் விடாமல் அவரை வெறித்தனமாக லாரி உள்ளேயே வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.

முதலில் பலாத்காரம் செய்த நான்கு பேரும் அவர் உயிர் போன பிறகு உடலை தூக்கி லாரியில் போட்டுள்ளனர். லாரியில் ஏறிய பிறகும் வெறி அடங்காமல் சடலத்தையும் நான்கு பேரும் புனர்ந்துள்ளனர்.

பிறகு, சடலத்தை கொண்டுசென்று, தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதனை போலீஸ் விசாரணையில் அவர்கள் கூறியுள்ளனர். இந்த தகவல்கள் கேட்பதற்கு மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.