7 தலைமுறைக்கும் செல்வம் கொழிக்க வேண்டுமா? உங்கள் குல தெய்வத்தை இப்படி வழிபடுங்கள் போதும்!

குலதெய்வ வழிபாடு என்பது அவரவர்களுடைய முன்னோர்கள் பல தலைமுறைகளாய் வழிபட்டு வந்த தெய்வமாகும்.


நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். அடுத்த சந்ததி நன்றாக இருக்க வேண்டும் என்பதே குலதெய்வ வழிபாட்டின் முக்கிய நோக்கம்

பூஜை அறைகளில் குலதெய்வத்தின் படம் தான் முதலில் இடம் பெற வேண்டும். அடுத்ததாக இஷ்ட தெய்வத்தின் படம் இருக்கலாம். எல்லா சாமி படங்களையும் மாட்டி வைத்தால் அனைத்துக்கும் தினமும் பூஜை செய்ய வேண்டியிருக்கும். ஆனால் வேலைப் பளு காரணமாக பூஜை செய்ய முடியாமல் போகும். பல சாமி படங்களுக்கு மத்தியில் குல தெய்வத்தை மறந்து விடுபவர்களும் உண்டு. எத்தனை கடவுளை வழிபட்டாலும் குலதெய்வ அருள் இல்லை என்றால் வாழ்க்கையில்  திருப்தி இருப்பதில்லை. குறைகளை  குலதெய்வத்திடம் சொல்லி வழிபட்டால் பிரச்சினைகளை குலதெய்வம் தீர்த்து வைக்கும் உங்கள் கூடவே அது வரும். நாட்கள் ஆக ஆக தான் அதன் அருமை புரியும்.

பூஜை அறையில் காமாட்சி விளக்கை பயன்படுத்தி விளக்கின் திரி கிழக்கு அல்லது வடக்கு முகமாக இருக்கும்படி வைத்து ஏற்றினால் குடும்ப முன்னேற்றம் ஏற்படும். கோரமாக இருக்கும் தெய்வங்களின் படங்களை வைப்பது தவறு அவர்களை சாந்தப்படுத்துவது கடினமானது. மேலும் வீடுகளில் சிலை வழிபாடு ஒவ்வாதது. அமாவாசை அன்று குல தெய்வ கோவிலுக்கு தொடர்ந்து சென்று இரண்டு மண்விளக்கு ஏற்றி ஒரு எலுமிச்சம் பழத்தை  சூலாயுதத்தில் குத்தி வழிபாடு செய்தால் கோரிக்கைகள் நிறைவேறும். 

மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும் குலதெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுக்கு வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும். ஒருவர் எவ்வளவு பூஜைகள் செய்தாலும் எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் குலதெய்வ அனுகிரகம் இல்லை என்றால், எந்த தெய்வ அனுகிரகமும் இல்லை என்றும், குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு என்றும் சொல்லப்படுகிறது.

நாம் அனுபவிக்கும் எல்லா பலன்களும் நாமும், நம் முன்னோர்களும் செய்த புண்ணியத்தின் அடிப்படையிலேயே கிடைக்கின்றன.  ஜாதகத்தில் உள்ள தோஷங்களை பித்ரு பூர்வபுண்ணிய ஸ்தானத்தின் காவல் தெய்வமான குலதெய்வம் தீர்த்து வைக்கும்.. ஒருவரின் சந்தோஷமான சுபிட்சமான வாழ்க்கைக்கு குலதெய்வ ஆராதனையும், பித்ருக்களின் ஆசியும் மிக முக்கியம்.

பல வீடுகள் நல்ல முறையில் இல்லாமல் இருக்க துர்சக்திகளின் ஆதிக்கம் காரணமாக உள்ளது. குலதெய்வ வழிபாட்டை ஒழுங்காக செய்பவர்களை எந்த கிரகமும் ஒன்றும் செய்துவிட முடியாது. நவகிரகங்களும் துணை நிற்கும். பெண்கள் பெண்கள் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கும் ஆண்டுக்கு ஒரு முறை வழிபாடு செய்தால் புகுந்த வீட்டில் எந்த பிரச்சனையையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் கிடைக்கும்.

குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே குலதெய்வ படத்தை அலங்கரித்து, பாரம்பரிய, படையலை வைத்து வழிபடலாம்.  குலதெய்வம் அசைவம் வைத்து படைக்கும் தெய்வமாக இருந்தால் தாராளமாக செய்யலாம். முன்னோர்களின் வழியை மாற்ற வேண்டாம். ஆண்டுக்கு ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்கு செய்யவேண்டியதை செய்து வழிபட்டால் குலம் தழைத்து, சந்ததியினர் வாழ்வார்கள்