ஹெல்மெட் போடலனா லைசென்ஸ் ரத்து! உயர்நீதிமன்றம் அதிரடி!

தமிழகத்தில் தொடர்ந்து வாகனம் ஓட்டுபவர்கால் ஹெல்மெட் அணியாததால் சாலை விபத்தில் உயிரிழப்பு அதிகமாவதை குறைக்க இனி ஹெல் மெட் அணியாதவர்களின் ஓட்டுனர் உரிமம் ஏன் ரத்து செய்யபட கூடாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியது வாகன ஓட்டிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கோரி கே.கே. ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிகுமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் ஹெல்மெட் அணிவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்ற கேள்விக்கு,

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிவது குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை என்று கூறியுள்ளார்,மேலும் சட்டவிரோதமாக நடத்தப்படும் பைக் பந்தயத்தை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அரசு தரப்பு வக்கீல் கூறினார்.

இதனையடுத்து, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த காவல் துறையினர் எடுத்த நடவடிக்கை குறித்து ஜூன் 6-ந்தேதி அதாவது இன்று போக்குவரத்து காவல்துறையின் இணை மற்றும் துணை கமி‌ஷனர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? என்ற உயர்நீதிமன்றம் கேள்வி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஹெல்மெட் கட்டாயம் என்கிற விதியை ஏன் கண்டிப்புடன் தமிழகத்தில் அமல்படுத்த முடியவில்லை? பெங்களூர், டெல்லி போன்ற பெருநகரங்களில் ஹெல்மெட் கட்டாயம் என்கிற விதி கண்டிப்புடன் பின்பற்றப்படுகிறது போல தமிழகத்தில் ஏன் முடியவில்லை. என பல கேள்விகளை நீதிமன்ற அமர்வு எழுப்பிருப்பது, இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.