முதல் நாள் மனைவியின் சடலம்..! மறுநாள் கணவனின் சடலம்! நாயுடன் வால்க்கிங் சென்றவர்கள் பார்த்த பகீர் காட்சி!

கனடா நாட்டில் மனைவியை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த அவரது கணவரும் மர்மமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகளான ராகேஷ் பட்டேல் மற்றும் ஹீரல் பட்டேல் ஆகிய இருவரும் கனடா நாட்டில் வசித்து வந்துள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக இருவரும் பிரிய முடிவு எடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹீரல் பட்டேல் காணாமல் போனதாக இவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் புகாரை ஏற்ற காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தநிலையில் காலை நேரம் நடைபயிற்சி மேற்கொண்ட நபர் ஒருவர் சாலையோரத்தில் பெண்ணின் சடலம் இருப்பதாக காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது அங்கு இறந்து கிடந்தது ராகேஷ் என்பவரின் மனைவி ஹீரல் பட்டேல் என்பதை காவல்துறையினர் உறுதிசெய்தனர்.

இதையடுத்து அவரது கணவர் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காவல்துறையினர் அவரது கணவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ராகேஷ் என்பவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சாலையோரத்தில் கிடந்துள்ளார்.இதையடுத்து அதைப்பார்த்த ரோட்டோரத்தில் வந்த நபர் ஒருவர் உடனே காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் மனைவியை கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான அவரது கணவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதையடுத்து அவர் மீதான வழக்கை காவல்துறையினர் தள்ளுபடி செய்துள்ளனர்.

இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொலையாளி யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.