40 அடி ஆழ கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது சிறுமி! ஓடி வந்து டைவ் அடித்து காப்பாற்றிய வீரப் பாட்டி!

40 அடி ஆழ கிணற்றில் டைவ் அடித்து பேத்தியை காப்பாற்றிய பாட்டிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


சென்னை பூந்தமல்லியில் வசித்து வருபவர் கிருபாவதி. இவருடைய மகள் அரிபிரியாவுக்கு திருமணமாகிவிட்டது. அரிபிரியாவுக்கு, ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 11) இரவு, வீட்டின் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, அங்குள்ள கிணற்றில் திடீரென விழுந்துவிட்டது. 40 அடி ஆழம் உள்ள அந்த கிணற்றில், 4 அடிக்கு தண்ணீர் மட்டும் உள்ளது. 

3 அடி அகலம் மட்டுமே உள்ள இந்த கிணற்றில், விழுந்த பேத்தியின் அலறல் சத்தம் கேட்டு, அவரது பாட்டி கிருபாவதி ஓடிவந்தார்.  எதையும் யோசிக்காத அவர் உடனடியாக, கிணற்றில் குதித்து, குழந்தையை காப்பாற்றிவிட்டார். இருந்தாலும், எப்படி மேலே வருவது என தெரியாமல், அவர் கூச்சல் போட்டுள்ளார்.

இதன்பேரில், அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து, பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து, பாட்டியையும், பேத்தியையும் பத்திரமாக மீட்டனர். இந்த துயரத்திலும் ஒரு ஆச்சரியம், பாட்டி, பேத்தி, இரண்டு பேருக்குமே எந்த காயமும் ஏற்படவில்லை...