சத்தீஸ்கர் மாநிலத்தில் இளைஞர் பெண்ணை காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி பலாத்காரம் செய்ததை அவரது தாயார் வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
மகன் ரேப் செய்ய தாய் வீடியோ எடுக்க..! இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பகீர் சம்பவம்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் இளம்பெண் ஒருவரை காதலிப்பது போல நடித்து, பெற்றோரிடம் அழைத்து சென்றுள்ளான் இளைஞன் ஒருவன். இளம்பெண்ணை வரவேற்ற தாய் இனிப்பு வழங்கியுள்ளார். இனிப்பில் மயக்க மருந்து கலந்தது தெரியாமல் சாப்பிட்டுவிட்டு அதே இடத்தில் மயங்கியுள்ளார்.
மயங்கிய நிலையில் இருந்த பெண்ணை, அந்த இளைஞன் பலாத்காரம் செய்துள்ளான். இதனை பெற்ற தாயே வீடியோ எடுத்துள்ளார். பிறகு, அந்த பெண் மயக்கம் தெளிந்ததும், அவரிடம் இளைஞனின் தாய், சகோதரி ஆகியோர் வீடியோவை காட்டி பணம் வேண்டும் என மிரட்டியுள்ளார்.
இதற்கு பயந்துபோன பெண், சொந்தமாக இருந்த நிலத்தை விற்று 4 லட்சம் பணம் கொடுத்துள்ளார். இதை தெரிந்துகொண்ட பெண்ணின் தந்தை எதற்க்காக நிலத்தை வீற்றீர்கள் என மிரட்டியபோது, பெண் உண்மையை கூறியுள்ளார்.
இதனால், பதறிப்போய் தந்தை போலீசிடம் புகார் அளித்துள்ளார். இதனை விசாரித்த போலீசார், உரியர்வர்களை கைது செய்து ஜெயிலில் அடைந்துள்ளனர்.