மகள்கள் கால்களை பிடிக்க..! மகன் கைகளை அமுக்க..! கழுத்தை நெறித்த மனைவி! கணவனுக்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம்!

தர்மபுரி மாவட்டத்தில் கட்டிட தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது புதிய திருப்பமாக அவரது மனைவி மற்றும் குழந்தைகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


தருமபுரி மாவட்டம் வேடியப்பன் திட்டு பகுதியை சேர்ந்தவர் தங்கராசு 40, இவரது மனைவி வனிதா 39, இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளார்.மகள் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். தங்கராசு அதே பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார்.

இதன் காரணமாகவே கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று தங்கராசு மது போதையில் வந்து வனிதாவுடன் தகராறு செய்துள்ளார். மேலும் மது குடிக்க பணம் தரவேண்டும் என தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து மனைவி மகன் மற்றும் மகன்கள் இருவரும் சேர்ந்து தந்தையை சமாதானம் செய்துள்ளனர். இதையடுத்து தங்கராசு தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். பின்னர் அதிகாலையில் தங்கராசு நீண்ட நேரம் ஆகியும் உறங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து வனிதா உடனே அருகில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பதறிப்போய் ஓடி வந்து பார்த்தபோது தங்கராசு உடல் எந்த ஒரு அசைவும் இன்றி கிடந்துள்ளது. இதையடுத்து அவரை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தங்கராசு இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். உடனே இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இந்த வழக்கு குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் வழக்கில் புதிய திருப்பமாக பிரேத பரிசோதனை அறிக்கை வந்துள்ளது.

அதில் தங்கராசு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். என மருத்துவர்கள் உறுதியளித்துள்ளனர். இதையடுத்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரது மனைவி வனிதா மற்றும் 2 மகன்கள் மற்றும் மகள் ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் வனிதாவின் பதில் முன்னுக்கு பின்னுமாக இருந்துள்ளது. இதையடுத்து சந்தேகமடைந்த காவல்துறையினர் துருவித்துருவி விசாரிக்கையில் வனிதா கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து அவர் கூறியதாவது சம்பவ தினத்தன்று தங்கராசு மது குடித்துவிட்டு மேலும் மது குடிக்க பணம் கேட்டு வந்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த வனிதா தனது இரு மகன்கள் மற்றும் மகளின் உதவியுடன் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக காவல்துறையினர் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.