ஈரோடு மாவட்டம் பவானி அருகே வரதட்சணை கொடுமையால் திருமணமாகி 2 ஆண்டுகளில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென இரவில் மாயமான 10 மாத குழந்தையின் இளம் தாய்..! மறுநாள் கிணற்றில் மிதந்த சடலம்! பவானி பகீர்..!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள வரதநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் இவருக்கும் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த சுகன்யா என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு தற்போது 10 மாத பெண்
குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வீட்டை விட்டு வெளியே சென்ற சுகன்யா மாலை வரை வீடு திரும்பவில்லை இதையடுத்து உறவினர்கள் அனைவரும் சுகன்யாவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
புகாரையடுத்து சுகன்யாவை தேடும் பணியில் காவல்துறையினரும் ஈடுபட்டனர். பின்னர் காலையில் அருகிலுள்ள கிணற்றுக்கு சென்று பார்த்தபோது சுகன்யா சடலமாக மிதப்பதை பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ப உடனே அருகில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் மூலம் சுகன்யாவின் உடலை கிணற்றுக்குள் இருந்து வெளியே எடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சுகன்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சுகன்யாவின் பெற்றோர் தனது மகள் வரதட்சணை கொடுமை செய்யப்பட்டு தற்கொலைக்கு தூண்டியதாக போலீசில் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது சுகன்யாவின் கணவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் தொழில் தொடங்குவதற்காக 50 ஆயிரம் சுகன்யாவின் பெற்றோரிடம் வாங்கியதாகவும் அதை திருப்பித் தராமல் இருந்துள்ளார்.
இதையடுத்து கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இதையடுத்து சந்திரசேகர் சுகன்யாவிடம் மீண்டும் பணம் வாங்கி வரச்சொல்லி கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தனது பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி வர மறுத்துள்ளார். பணம் வாங்கி வரச்சொல்லி சந்திரசேகர் கொடுமைப்படுத்தியதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.இதனால் சுகன்யா கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினர் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். குழந்தைக்கு 10 மாதமே ஆன நிலையில் அவரது தாய் தற்கொலை செய்துள்ள நிலையில் அந்த குழந்தையின் வாழ்க்கை நிலை என்னவாகுமோ என்று கேள்விக் குறியாக உள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.