கல்லூரி மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி..! எடப்பாடி பழனிசாமியின் அதிரடி உத்தரவு

கொரோனா நோய் தொற்று காரணமாக, உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி,தமிழ்நாடு அரசால்அமைக்கப்பட்டஉயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும், பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகிலஇந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மதிப்பெண்கள்வழங்கி முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலைமற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கும் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


அதேபோன்று பலவகை தொழில்நுட்ப பட்டயப் படிப்புபயிலும் மாணாக்கர்களுக்கும், முதுகலைப் பட்டப்படிப்பில்முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும், இளநிலைபொறியியல்பட்டப்படிப்பில்முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் முதுநிலைபொறியியல்பட்டப்படிப்பில்முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் அதேபோன்று, எம்.சி.ஏ. முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் இந்தப் பருவத்திற்குமட்டும் தேர்வில் இருந்து விலக்குஅளித்து அடுத்தகல்விஆண்டிற்குச் செல்ல நான் 23.7.2020 அன்றுஉத்தரவிட்டிருந்தேன்.

அதன் அடிப்படையில், உயர்கல்வித்துறை 27.7.2020 அன்று விரிவான வழிகாட்டுதல்களை வழங்கி அரசாணை வெளியிட்டது. தற்போது மாணவர்களின் கோரிக்கையை ஏற்று,அவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டகுழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இறுதி பருவத்தேர்வுகளைத் தவிர பிற பருவப்பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணாக்கர்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.