சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த 30-ந்தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி நிகழ்ச்சியை புறக்கணித்த தூர்தர்ஷன் பெண் அதிகாரியை சஸ்பெண்டு செய்து தலைமை செயல் அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்
மோடி நிகழ்ச்சி நேரலையில் மிஸ்! சென்னை பெண் டிவி அதிகாரிக்கு நேர்ந்த கதி! சென்னை பரபரப்பு!

உலக அளவில் புகழ்பெற்ற சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி மாணவர்களிடன் உரையாற்றினார். பின்னர் இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்திய ஹேக்கத்தான் தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி பரிசுகளை வழங்கினார்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, “உலகில் மிகவும் பழமையான மொழி தமிழ்” என கூறிய பிரதமர். தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு மிகவும் சிறப்பானது என்றும், தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தது” என பெருமிதத்துடன் கூறியுள்ளார். பின்னர் தமிழ் நாட்டின் உணவுகள் மிகவும் சிறப்பு மிக்கது இட்லி, தோசை, வடை, பொங்கல் போன்றை உலக புகழ்பெற்ற உணவுகளாக திகழ்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி நிகழ்ச்சியினை தமிழகம் மற்றும் மற்ற மாநில தொலைக்காட்சிகள் நேரலை செய்த நிலையில், அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் நேரலை செய்யவில்லை என புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒளிபரப்பு பிரிவின் உதவி இயக்குனர் வசுமதியிடம் பிரசார் பாரதி அதிகாரிகள் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் தான் தெரிய வந்துள்ளது மோடியின் நிகழ்ச்சிகளை 18 கேமிராக்கள் மூலம் ‘ரெக்கார்டு’ செய்யப்பட்டது என்றும், தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்ததும் தெரிய வந்ததுள்ளது.
பின்னர், பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி சசி ஷேகர் அவர்கள் உதவி இயக்குனர் வசுமதியிடம் நேரலை செய்யாதது குறித்த விசாரணை உரிய பதிலை தெரிவிக்கவில்லை. அதனால் உதவி இயக்குனர் வசுமதி சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார் தலைமை செயல் அதிகாரி.