உங்கள் குழந்தை மிகவும் கோபம் கொள்கிறதா! இதோ தீர்வு!!

சில குழந்தைகள் மிகவும் கோபமும் ஆக்ரோஷமுமாக வளர்வார்கள். கோபம் வந்தால் தலையை சுவரில் மோதுவது... கைகளால் முகத்தில் அறைவது போன்றவற்றைச் செய்வார்கள். இதனை சிறுவயதிலேயே நிச்சயம் குணப்படுத்திவிட முடியும்.


* தாய் அல்லது தந்தை கோபக்காரர்களாக இருப்பதைப் பார்த்துத்தான் பெரும்பாலான பிள்ளைகள் இப்படி நடக்கின்றன. அதனால் முதலில் பெற்றோர் திருந்த வேண்டும். குழந்தையின் முன் சண்டை போடக்கூடாது.

* குழந்தையை அடிப்பதால் பிரச்னை தீராது... மேலும் பெரிதாகவே செய்யும்.

* தன் மீது பெற்றோர் கவனம் படியவேண்டும் என்ற எண்ணத்திலும் இப்படிப்பட்ட செயல்களை சில குழந்தைகள் செய்யலாம்.

குழந்தையின் இந்த செய்கைகளைப் புறக்கணிப்பது, கண்டுகொள்ளாமல் இருப்பது, இப்படி செய்தால் உனக்குத்தான் பாதிப்பு எங்களுக்கு இல்லை என்று எடுத்துச் சொல்வது போன்றவை மூலம் இந்தப் பிரச்னையைத் தவிர்க்க முடியும்.